Latest News :

திரிஷாவின் முன்னாள் காதலருக்கு அடி உதை - 2 பேர் கைது
Wednesday September-27 2017

சென்னையை சேர்ந்த தொழிலதிபரும் திரைப்பட தயாரிப்பாளருமான வருண் மணியனும், திரிஷாவும் காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து பிறகு திருமணம் நின்று போனது. இதையடுத்து திரிஷா சினிமாவில் பிஸியாகிவிட்டார். வருண் மணியனுக்கும் வேறு ஒரு பெண்ணும் திருமணம் நிச்சயமாகிவிட்டது.

 

இதற்கிடையே, வருண் மணியனுக்கு தொலைபேசியில் தொடர்ந்து கொலை மிரட்டல் வந்ததால், அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், சில நாட்களுக்கு முன்பு அவருக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுவிட்டது.

 

இந்த நிலையில், வருண் மணியனை அவரது அலுவலகத்தில் வைத்து இரண்டு பேர் கடுமையாக தாக்கியுள்ளனர்.

 

சென்னை ஆழ்வார்பேட்டையில் வசிக்கும் வருண் மணியனின், அலுவலகம் நந்தனத்தில் உள்ளது. நேற்று அலுவலக பணிகள் முடிந்து லிஃப்ட்டில் அவர் கீழே இறங்கும்போது, லிஃப்ட்டுக்குள் இருந்த 2 பேர் வருண்மணியனை ஸ்குருடிரைவரால் தாக்கியுள்ளனர். இதில் அவரது கை மற்றும் இடுப்பில் காயம் ஏற்பட்டுள்ளது. 4-வது தளத்தில் லிஃப்ட் கதவு திறந்தபோது அலுவலக ஊழியர்கள் ஓடிவந்து, தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரையும் மடக்கிப்பிடித்தனர். பிறகு அவர்கள் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

 

சைதாபேட்டை போலீஸார் அந்த இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர். அவர்கள் வருண் மணியனை எதற்காக தக்கினார்கள் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Related News

761

கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு ரூ.1 லட்சம் கொடுத்து வாழ்த்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான்!
Sunday November-02 2025

பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...

Recent Gallery