விவாகரத்து மற்றும் மறுமணம் கலாச்சாரங்கள் நாட்டில் அதிகரித்து வந்தாலும், அதிகமான வயது வித்தியாசம் உள்ளவர்கள் தம்பதிகளாக இணைவது அவ்வபோது அரங்கேறி வருகிறது. அந்த வகையில், முன்னணி நடிகர் ஒருவர், தனக்கு மகளாக நடித்த நடிகையை தனது மூன்றாவது மனைவியாக்கி கொள்ள இருக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஆம், இந்தி சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான அமீர்கானுக்கு, இந்திய முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படங்களில் நடித்து வரும் அமீர்கான், சமீபத்தில் தனது இரண்டாவது மனைவி கிரண் ராவை விவாகரத்து செய்தார்.
இந்த நிலையில், அமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம் செய்ய இருப்பதாகவும், ‘தங்கல்’ படத்தில் அவருக்கு மகளாக நடித்த சனா ஷேக் தான் அமீர்கானின் மூன்றாவது மனைவியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தங்கல் படத்தில் நடித்த போது அமீர்கானுக்கும், சனா ஷேக் இடையிலான நட்பு காதலாக மாறியதோடு, அவர்கள் சேர்ந்து ஏகப்பட்ட விருந்துகளில் பங்கேற்று வந்துள்ளனர். இதன் காரணமாக அமீர்கானுக்கும் அவருடைய மனைவி கிரண் ராவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பிரிந்ததாகவும் கூறப்படுகிறது.
தற்போது இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்திருக்கும் அமீர்கான் விரைவில் சனா ஷேக்கை மூன்றாவது திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

56 வயதாகும் நடிகர் அமீர்கான், 29 வயதுள்ள பாத்திமா சனா ஷேக்கை திருமணம் செய்யவிருக்கிறார் என்கிற தகவல் பல நாட்களாக ஊடங்கங்களில் வெளிவந்துக் கொண்டிருந்தாலும், அமீர்கான் மற்றும் சனா ஷேக் தரப்பில் இருந்து எந்த ஒரு மறுப்பும் இதுவரை தெரிவிக்காமல் இருப்பதே அவர்களின் திருமண தகவல் உண்மை என்பதற்குச் சான்று என்கிறார்கள்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...