’ஹர ஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ போன்ற படங்கள் மூலம் சர்ச்சையில் சிக்கினாலும், வியாபார ரீதியாக மாபெரும் வெற்றி பெறும் படங்கள் கொடுப்பதில் கெட்டிக்காரர் என்று பெயர் எடுத்தவர் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார். ஆர்யாவை வைத்து ‘கஜினிகாந்த்’ என்ற படத்தை இயக்கியவர், அதற்கு பிறகு இயக்கிய படத்தில் இயக்குநராக மட்டும் இன்றி ஹீரோவாகவும் களம் இறங்கினார்.
தற்போது இயக்குநர் பணியை மட்டுமே கவனிக்க முடிவு செய்துள்ள சந்தோஷ் பி.ஜெயக்குமார், பிரபு தேவாவை ஹீரோவாக வைத்து தனது புதிய படத்தை துவக்கியுள்ளார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு இன்று எளிமையான பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.
பிரபு தேவா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ரைசா வில்சன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். பல்லு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்தப் படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் மினி ஸ்டுடியோ என்னும் பட நிறுவனம் சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரிக்கிறார்.
உலக அளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து அதரப்பினரையும் கவர்ந்து, இன்று வரை அனைத்து தரப்பின் மக்களின் பேவரைட் ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஜுராசிக் வேர்ல்ட் ட்ரையாலாஜி’-யின் வெற்றிக்குப் பிறகு புதிய கதையுடன் மீண்டும் உருவாகியுள்ளது...
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியானது...
தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆனடுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் டாக்டர்...