Latest News :

’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்புக்கு மீண்டும் சிக்கல்!
Friday July-23 2021

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய நிலையில், பல்வேறு சிக்கல்களால் படப்பிடிப்பு அவ்வபோது பாதிக்கப்பட்டது. இருப்பினும், படக்குழுவினரின் விடா முயற்சியால் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமக்கப்பட்டது.

 

இதற்கிடையே கொரோனா பரவலால் பல மாதங்களாக படப்பிடிப்பு பாதிக்கப்பட்டாலும், கொரோனா முதல் அலைக்குப் பிறகு படப்பிடிப்புக்கு அரசு அனுமதி வழங்கிய உடன், மீண்டும் தொடங்கப்பட்ட பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு விரைவாக நடத்தி முடிக்கப்பட்டது. இதன் மூலம் இரண்டு பாகமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் சுமார் 90 சதவீத படப்பிடிப்புகள் முடிக்கப்பட்டுவிட்டது.

 

இன்னும்  10 சதவீத படப்பிடிப்புகளே பாக்கியிருந்த நிலையில் கொரோனா இரண்டாவது அலையால் மீண்டும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வந்திருப்பதால், அரசு சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து கடந்த ஜூலை 20 ஆம் தேதி பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது.

 

பாண்டிச்சேரியில் பிரம்மாண்ட அரங்கம் அமைத்து அதில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

அதாவது, 300 பேர்கள் கலந்துக்கொண்ட பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் சுமார் 26 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் படப்பிடிப்பில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்களாம். இதனால், படப்பிடிப்பில் கலந்துக்கொண்ட முக்கிய நடிகர், நடிகைகள் உள்ளிட்ட அனைவரும் அச்சம் அடைந்துள்ளார்கள்.

 

மேலும், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு அரங்கம் அமைக்கப்பட்டதாகவும், அதில் பணியாற்றியவர்களுக்கு கொரோனா இருந்து, அவர்கள் மூலமாகவே மற்றவர்களுக்கு பரவியதாகவும் கூறப்படுகிறது.

 

இதனால், ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு எந்த நேரத்திலும் நிறுத்தப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. அதே சமயம், கொரோனா மூன்றாவது அலை ஆகஸ்ட் மாதம் கடைசியில் இந்தியாவை தாக்க கூடும் என்பதால், அதற்குள், முதல் பாகத்தை முடித்தாக வேண்டும் என்று, ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு வேகமாக பணியாற்றி வருகிறார்களாம்.

Related News

7646

தங்கம் விலை உயர்வால் கவலையடைந்த ஆண்ட்ரியா!
Monday November-17 2025

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

Recent Gallery