Latest News :

பிறந்தநாளையொட்டி வெளியான அறிவிப்பு! - சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம்
Friday July-23 2021

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம், அவரது 40 வது படமாக உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் முதல் பார்வை மற்றும் சூர்யாவின் பிறந்தநாளையொட்டி நேற்று மாலை வெளியிடப்பட்டது. அதன்படி, படத்திற்கு ’எதற்கும் துணிந்தவன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

இப்படத்தின் முதல் பார்வை விளம்பரத்தில் சூர்யா, மிகப்பெரிய கத்தியுடன் இருப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது. எனவே, இப்படம் அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்ததாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த நிலையில், சூர்யாவின் பிறந்தநாளான இன்று, அவருடைய 39 வது படத்தின் முதல் பார்வை மற்றும் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ‘ஜெய்பீம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில், சூர்யா வழக்கறிஞர் வேடத்தில் நடிக்கிறார். படத்தின் தலைப்பும், சூர்யாவின் கதாப்பாத்திரமும் இப்படத்தின் மீதும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இப்படத்தை, ’கூட்டத்தில் ஒருவன்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்குகிறார். ரஜிஷா விஜயன், மணிகண்டன் ஆகியோரும் இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

 

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கதிர் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

 

ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தின் முதல் பார்வை மற்றும் தலைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது சூர்யா ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியடைய செய்த நிலையில், அவருடைய பிறந்தநாளையொட்டி அவரது 2 படங்களின் தலைப்பு மற்றும் முதல் பார்வை அடுத்தடுத்த வெளியானதால், சூர்யா ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகிறார்கள்.

Related News

7649

”சினிமாவில் அதிகரிக்கும் பிளாக் மெயில்” - ’வள்ளுவன்’ பட விழாவில் ஆர்.கே.செல்வமணி வருத்தம்
Thursday October-30 2025

ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’...

’தாரணி பட விழாவில் விஜயை விமர்சித்த நடிகர் விஜய் விஷ்வா!
Tuesday October-28 2025

மனோன்மணி கிரியேஷன்ஸ் சார்பில் பி லலிதா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாரணி’...

’கசிவு’ ஆத்ம திருப்திக்காக நடித்த படம் - எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி
Wednesday October-29 2025

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படங்களாக மாறிவரும் வரிசையில் தற்போது அவர் எழுதிய ’கசிவு’ என்கிற நாவல் அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாகியுள்ளது...

Recent Gallery