’இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அப்படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டார். அதன் மூலம் அவருக்கு சில படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில், நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நள்ளிரவு தனது நண்பர்களுடன் மாமல்லபுரம் அருகே காரில் சென்றுக் கொண்டிருந்த யாஷிகா ஆனந்த், பயங்கர விபத்தில் சிக்கியுள்ளார்.
இந்த விபத்தில், யாஷிகா ஆனந்தின் தோழி வள்ளிச்செட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகவும், யாஷிகா ஆனந்த், படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், யாஷிகா ஆனந்தின் இரண்டு நண்பர்களுடம் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்களாம். மொத்தம் நான்கு பேர் இந்த கார் விபத்தில் சிக்கியுள்ளனர்.
கார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நடிகை யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட கார் விபத்தில் சிக்கிய நான்கு பேரும் மது அருந்திவிட்டு காரை வேகமாக இயக்கி இருக்கலாம், என்று சந்தேகக்கிப்படுகிறது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...