Latest News :

உயிருக்கு போராடும் நடிகை யாஷிகா ஆனந்த்! - விபதுக்கு காரணம இதுவா?
Sunday July-25 2021

’இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அப்படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டார். அதன் மூலம் அவருக்கு சில படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

இந்த நிலையில், நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நள்ளிரவு தனது நண்பர்களுடன் மாமல்லபுரம் அருகே காரில் சென்றுக் கொண்டிருந்த யாஷிகா ஆனந்த், பயங்கர விபத்தில் சிக்கியுள்ளார்.

 

இந்த விபத்தில், யாஷிகா ஆனந்தின் தோழி வள்ளிச்செட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகவும், யாஷிகா ஆனந்த், படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

 

மேலும், யாஷிகா ஆனந்தின் இரண்டு நண்பர்களுடம் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்களாம். மொத்தம் நான்கு பேர் இந்த கார் விபத்தில் சிக்கியுள்ளனர்.

 

கார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நடிகை யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட கார் விபத்தில் சிக்கிய நான்கு பேரும் மது அருந்திவிட்டு காரை வேகமாக இயக்கி இருக்கலாம், என்று சந்தேகக்கிப்படுகிறது.

Related News

7651

ஆதித்யா பாஸ்கர் - கெளரி கிஷன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!
Thursday December-11 2025

நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகனும், ‘96’ மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவருமான ஆதித்யா பாஸ்கரும், கெளரி கிஷனும் மீண்டும் இணைந்து நடித்திருக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது...

அர்ஜுன் தாஸின் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது!
Thursday December-11 2025

முன்னணி இளம் நட்சத்திர நடிகர் அர்ஜுன் தாஸ், மலையாள முன்னணி நடிகை அன்னா பென் ,நகைச்சுவை நடிகர் யோகிபாபு, ஆகியோர் நடிப்பில்,  பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் ( Power House Pictures) சார்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி, இயக்க, புதுமையான களத்தில் உருவாகும்  ஃபேமிலி எண்டர்டெயினர் படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள இன்று இனிதே நடைபெற்றது...

என்னுள் எழுந்த ”நான் யார் ?” என்ற கேள்வி தான் ‘29’ படம்! - இயக்குநர் ரத்னகுமார்
Thursday December-11 2025

’மேயாத மான்’, ‘ஆடை’, ‘குளு குளு’ ஆகிய படங்களை தொடர்ந்து ரத்னகுமார் இயக்கும் 4 வது படத்திற்கு ‘29’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...

Recent Gallery