Latest News :

உயிருக்கு போராடும் நடிகை யாஷிகா ஆனந்த்! - விபதுக்கு காரணம இதுவா?
Sunday July-25 2021

’இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அப்படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டார். அதன் மூலம் அவருக்கு சில படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

இந்த நிலையில், நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நள்ளிரவு தனது நண்பர்களுடன் மாமல்லபுரம் அருகே காரில் சென்றுக் கொண்டிருந்த யாஷிகா ஆனந்த், பயங்கர விபத்தில் சிக்கியுள்ளார்.

 

இந்த விபத்தில், யாஷிகா ஆனந்தின் தோழி வள்ளிச்செட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகவும், யாஷிகா ஆனந்த், படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

 

மேலும், யாஷிகா ஆனந்தின் இரண்டு நண்பர்களுடம் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்களாம். மொத்தம் நான்கு பேர் இந்த கார் விபத்தில் சிக்கியுள்ளனர்.

 

கார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நடிகை யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட கார் விபத்தில் சிக்கிய நான்கு பேரும் மது அருந்திவிட்டு காரை வேகமாக இயக்கி இருக்கலாம், என்று சந்தேகக்கிப்படுகிறது.

Related News

7651

துல்கர் சல்மானை நடிப்பு சக்கரவர்த்தியாக மக்கள் கொண்டாடுவார்கள் - நடிகர் ராணா பாராட்டு
Thursday November-06 2025

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
Thursday November-06 2025

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

Recent Gallery