தமிழ்த் திரைப்படங்கள் பல இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருவது போல், தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க பிற மொழி நடிகர், நடிகைகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதேபோல், பிற மொழி சினிமாக்களின் முன்னணி நடிகர்களாக இருக்கும் பலர், தங்களது வாரிசுகளை தமிழ் சினிமாவில் நடிக்க வைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த ராஜ்குமாரின் பேத்தி தன்யா ராம்குமார், விரைவில் தமிழ் சினிமாவில் நுழைய இருக்கிறார்.
நடிகர் ராஜ்குமாரின் மகள் வழி பேத்தியான தன்யா, ஏற்கனவே சில கன்னட திரைப்படங்களில் நடித்திருக்கும் நிலையில், விரைவில் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

காவிரி பிரச்சனை வரும்போதெல்லாம், தமிழர்களுக்கு தண்ணீர் தரக்கூடாது என்று போராடும் கன்னட நடிகர்களில் ஒருவரான ராஜ்குமார், தமிழ்நாட்டு மக்களுக்கு தண்ணீர் தரவில்லை என்றாலும், தமிழ்நாட்டு சினிமா ரசிகர்களை மகிழ்விப்பதற்காக தனது பேத்தியை தமிழ் சினிமாவுக்கு கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...