Latest News :

ஓவியாவை காட்டேரியாக மாற்றிய இயக்குநர்!
Thursday September-28 2017

’யாமிருக்க பயமே’ என்ற பேய் பேய் படத்தின் மூலம் ரசிகர்களை வயிறு வலிக்க சிறிக்க வைத்த இயக்குநர் டீகே, ஓவியாவை காட்டேரியாக்கியுள்ளார். ‘யாமிருக்க பயமே’ படத்திற்கு பிறகு ஜீவாவை வைத்து ‘கவலை வேண்டாம்’ படத்தை இயக்கியவர், தான் இயக்கும் மூன்றாவது படத்திற்கு ‘காட்டேரி’ என்று தலைப்பு வைத்துள்ளார்.

 

ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் ஹீரோவாக ஆதித்யா நடிக்கிறார். இவர் தெலுங்கு மற்றும் தமிழில் பல படங்களில் நடித்து வரும் சாய்குமாரின் மகன் ஆவார்.

 

இப்படத்தின் தொடக்க விழா சமீபத்தில் சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில், நடிகர் சாய்குமார், அறிமுக நாயகன் ஆதித்யா, கௌதம் கார்த்திக், இயக்குநர் டீகே, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மற்றும் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். அதன் போது காட்டேரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.

Related News

766

கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு ரூ.1 லட்சம் கொடுத்து வாழ்த்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான்!
Sunday November-02 2025

பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...

Recent Gallery