சினிமாவில் நடிகர்களை வைத்து தான் ஒரு திரைப்படத்தின் வியாபாரமும், லாபமும் அமையும். ஆனால், அதை முறியடித்து நடிகைகளினாலும் அதை செய்ய முடியும் என்று ஒரு சில நடிகைகள் நிரூபித்திருக்கிறார்கள். அந்த வகையில், தற்போதைய தமிழ் சினிமாவில் அதை சில வருடங்களாக நிரூபித்து வருபவர் நயன்தாரா மட்டும் தான்.
தனது பல காதல் தோல்விகளையும் கடந்து நம்பர் ஒன் நாயகியாக வலம் வரும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் என்ற இயக்குநருடன் காதல் வயப்பட்டதும், அவருடன் இணைந்து ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதும் வெட்ட வெளிச்சம் ஆன பிறகும், நம்பர் ஒன் நடிகையாக ஜொலித்து வருகிறார்.
இதற்கிடையே நயன்தாரா தயாரித்து நடித்துள்ள முதல் திரைப்படமான ‘நெற்றிக்கண்’ திரைப்படம் விரைவில் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை மிகப்பெரிய தொகைக்கு ஒடிடி நிறுவனம் வாங்கியிருப்பது தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்கள் பலரின் புருவத்தை உயர்த்தியுள்ளது.
ஆனால், நயன்தாராவோ தனது முதல் தயாரிப்பே இவ்வளவு பெரிய லாபத்தை கொடுத்ததால் தொடர்ந்து படம் தயாரிப்பில் ஈடுபடுவதோடு, அப்படங்களை நேரடியாக ஒடிடி தளங்களில் வெளியிடவும் முடிவு செய்துள்ளாராம். இதற்காக முன்னணி ஒடிடி தளம் ஒன்றுடன் ஒப்பந்தம் ஒன்றையும் போட இருக்கிறாராம்.
நயன்தாரா படங்களுக்கு இப்படி ஒரு மவுசா!, எப்படி அது!, என்று விசாரிக்கையில், ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்திற்கு தனது நெற்றிக்கண் படத்தை நயன்தாரா, விலை பேசிய போது, பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு பெரிய தொகையை கொடுக்க முன்வந்த அந்த ஒடிடி நிறுவனம், கண்டிஷன் ஒன்றையும் போட்டதாம்.
அதாவது, ‘நெற்றிக்கண்’ படத்தை வாங்க நாங்க ரெடி, நயன்தாரா எங்க சேனலுக்கு பேட்டி கொடுக்க ரெடியா? என்பது தான் அந்த கண்டிஷன். இதற்கு நயன் ஓகே சொன்னது மட்டும் அல்ல, அந்த பேட்டியில் அவர்கள், எதை பற்றி கேட்கிறார்களே அதற்கு நயன், பதில் அளிக்க வேண்டும், என்பது தான் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம்.
இப்படி ஒரு பேட்டிக்கு நயன்தாரா சம்மதம் தெரிவித்ததால் தான், அவருடைய நெற்றிக்கண் படம் பெரிய தொகைக்கு வாங்க பட்டது. அது சரி, அந்த சேனல் அப்படி என்ன கேள்வியை கேட்க போகிறது என்று யோசிக்கிறீர்களா?, வேறென்ன நயனின் கல்யாணம் பற்றிய தகவலை தான். நயனும் கிடைத்த வரை லாபம், என்று தனது கல்யாண தகவலை வியாபரமாக்கி கோடிகளை சம்பாதிக்க தொடங்கி விட்டார்.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...