இந்திய சுதந்திரத்திற்கு போராடிய, மறக்கப்பட்ட வரலாற்று நாயகர்களின் கதையை சொல்லும் திரைப்படமாக ‘ஆஸாத் ஹிந்து’ என்ற தொடர் உருவாக உள்ளது. பல திரைப்படங்களை உள்ளடக்கிய இத்தொடரின் முதல் திரைப்படத்தின் அறிவிப்பு, 75 வது சுதந்திரதின கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
’வீராங்கனை துர்காவதி தேவி’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை ‘83’ மற்றும் ‘தலைவி’ ஆகிய படங்களை தயாரித்து வரும் விஷ்ணு வர்தன் இந்தூரி தயாரிக்கிறார்.
சுதந்திர போராட்டத்தில் பங்குகொண்ட, மறக்கப்பட்ட ’வீராங்கனை துர்காவதி தேவி’ என அழைக்கப்பட்ட துர்கா பாபியின் வாழ்க்கையை திரைக்கு எடுத்து வரவுள்ளது. இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயே அரசுக்கு எதிராக, பகத் சிங் மற்றும் சந்திரசேகர ஆஸாத் போன்ற வீரர்களுக்கு, சுதந்திரத்திற்கு முழு அர்ப்பணிப்புடன் போராட தூண்டுகோலாக அமைந்த வீராங்கனை அவர்.
ஆங்கிலேய உளவு நிறுவனமான MI5 வீராங்கனை துர்காவதியை ‘இந்தியாவின் அக்னி’ என்று அழைத்தது குறிப்பிடத்தக்கது.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...