இந்திய சுதந்திரத்திற்கு போராடிய, மறக்கப்பட்ட வரலாற்று நாயகர்களின் கதையை சொல்லும் திரைப்படமாக ‘ஆஸாத் ஹிந்து’ என்ற தொடர் உருவாக உள்ளது. பல திரைப்படங்களை உள்ளடக்கிய இத்தொடரின் முதல் திரைப்படத்தின் அறிவிப்பு, 75 வது சுதந்திரதின கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
’வீராங்கனை துர்காவதி தேவி’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை ‘83’ மற்றும் ‘தலைவி’ ஆகிய படங்களை தயாரித்து வரும் விஷ்ணு வர்தன் இந்தூரி தயாரிக்கிறார்.
சுதந்திர போராட்டத்தில் பங்குகொண்ட, மறக்கப்பட்ட ’வீராங்கனை துர்காவதி தேவி’ என அழைக்கப்பட்ட துர்கா பாபியின் வாழ்க்கையை திரைக்கு எடுத்து வரவுள்ளது. இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயே அரசுக்கு எதிராக, பகத் சிங் மற்றும் சந்திரசேகர ஆஸாத் போன்ற வீரர்களுக்கு, சுதந்திரத்திற்கு முழு அர்ப்பணிப்புடன் போராட தூண்டுகோலாக அமைந்த வீராங்கனை அவர்.
ஆங்கிலேய உளவு நிறுவனமான MI5 வீராங்கனை துர்காவதியை ‘இந்தியாவின் அக்னி’ என்று அழைத்தது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து அதரப்பினரையும் கவர்ந்து, இன்று வரை அனைத்து தரப்பின் மக்களின் பேவரைட் ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஜுராசிக் வேர்ல்ட் ட்ரையாலாஜி’-யின் வெற்றிக்குப் பிறகு புதிய கதையுடன் மீண்டும் உருவாகியுள்ளது...
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியானது...
தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆனடுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் டாக்டர்...