90-களில் பிரபலமாக இருந்த தொலைக்காட்சி தொகுப்பாளர்களில் ஆனந்த கண்ணனை யாராலும் மறக்க முடியாது. சன் மியூச்க் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய ஆனந்த கண்ணன், சிங்கப்பூரில் வாழும் தமிழர் ஆவார். சிங்கப்பூரின் முன்னணி தமிழ் தொலைக்காட்சியான வசந்தம் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய ஆனந்த கண்ணன், சென்னை வந்ததும், சன் மியூக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார்.
தமிழக ரசிகர்களின் பேவரைட் தொகுப்பாளராக வலம் வந்த ஆனந்த கண்ணன், பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த நிலையில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களிலும் நடிக்க தொடங்கினார். பிறகு வெங்கட் பிரபு இயக்க சரோஜா படத்திலும் நடித்தவர், சில படங்களில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். ஆனால், அந்த படங்கள் வெளியாகவில்லை.
இதற்கிடையே, சினிமா வாய்ப்பு குறைந்ததால் மீண்டும் சிங்கப்பூருக்கு சென்ற ஆனந்த கண்ணன், மீண்டும் வசந்தம் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றியதோடு, தான் கற்றுக்கொண்ட கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமிய களைகளை பிறருக்கு கற்றுக்கொடுப்பதற்காக ‘ஆனந்தக் கூத்து’ என்ற பயிற்சி பள்ளியை தொடங்கி நடத்தி வந்தார்.
இந்த நிலையில், ஆனந்த கண்ணன் உயிரிழந்துவிட்டதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருக்கும் இயக்குநர் வெங்கட் பிரபு, அவருடைய இரப்பு தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆனால், அவருடைய மரணத்திற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.
ஆனந்த கண்ணன் கேன்சரால் பாதிக்கப்பட்டு பல வருடங்களாக சிகிச்சை பெற்று வந்ததாகவும், கடந்த சில மாதங்களாகவே அவருடைய உடல் நிலை மிக மோசமடைந்த நிலையில், அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...