Latest News :

வன்னியர்களை ஏமாற்றிய இயக்குநர் மோகன்! - வழக்கு தொடர முடிவு?
Thursday August-19 2021

கிரவுட் பண்டிங் என்று சொல்லப்படும் பொதுமக்களின் நிதி உதவியோடு தயாரிக்கப்பட்ட படமான ‘திரெளபதி’ கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியானது. சுமார் ரூ.40 லட்சம் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் இப்படம், திரையரங்குகளில் வெளியாகி ரூ.10 கோடி வரை வருவாய் ஈட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

 

இதற்கிடையே, வன்னியர்களுக்கு ஆதரவாக படம் எடுக்கிறேன், என்று கூறிக்கொண்டு அவர்களிடம் பல உதவிகளை பெற்ற இயக்குநர் மோகன், திரைப்படம் வெளியாகி லாபம் ஈட்டியதை மறைத்து, நஷ்ட்ட கணக்கு காட்டி வருவதாகவும், அதனால் வன்னியர்கள் அவர் மீது கடும்கோபத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

மேலும், வன்னிய சமூகத்தை சேர்ந்த திரையரங்க உரிமையாளர்கள் பலர், இலவசமாக படத்தை ரிலீஸ் செய்ததோடு, வீடு வீடாக சென்று ‘திரெளபதி’ படத்தின் டிக்கெட்களை விநியோகம் செய்தார்களாம். இதுபோல் வன்னியர்கள் செய்த பல உதவிகளை பெற்றுக்கொண்ட இயக்குநர் மோகன், படத்தை சரியாக எடுக்காததோடு, படம் தொடர்பான வியாபரத்திலும் சில மோசடியை செய்திருப்பதாக குற்றம் சாட்டும் வன்னிய சமூகத்தினர், இயக்குநர் மோகன் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதோடு, அவருடைய புதிய படமான ‘ருத்ரதாண்டவம்’ படத்தை புறக்கணிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.a

Related News

7688

தங்கம் விலை உயர்வால் கவலையடைந்த ஆண்ட்ரியா!
Monday November-17 2025

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

Recent Gallery