நடன இயக்குநர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த ‘காஞ்சனா’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து ‘காஞ்சனா’ என்ற தலைப்பில் அடுத்தடுத்த பாகங்களை இயக்கியவர் இதுவரை மூன்று பாகங்களை இயக்கியிருக்கிறார். மூன்று பாகங்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது.
தற்போது பல படங்களை இயக்கி நடித்து வரும் ராகவா லாரன்ஸ், ‘காஞ்சனா’-வின் நான்காவது பாகத்தையும் எடுக்க உள்ளார்.
இந்த நிலையில், ‘காஞ்சனா 3’-யில் பிளாஷ்பேக் பகுதியில் ராகவா லாரன்ஸின் காதலியாக நடித்த ரஷ்ய நாட்டை சேர்ந்த மாடலும், நடிகையுமான அலெக்ஸாண்ட்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
24 வயதாகும் நடிகை அலெக்ஸாண்ட்ரா, கோவாவில் உள்ள தனது வீட்டில் கடந்த வியாழனன்று தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
தனது காதலருடன் கோவாவில் வாழ்ந்து வந்த நடிகை அலெக்ஸாண்ட்ரா, காதலரை பிரிந்ததால் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், அவருடைய மரணத்தை மர்ம மரணமாக வழக்கு பதிவு செய்திருக்கும் கோவா போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உலக அளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து அதரப்பினரையும் கவர்ந்து, இன்று வரை அனைத்து தரப்பின் மக்களின் பேவரைட் ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஜுராசிக் வேர்ல்ட் ட்ரையாலாஜி’-யின் வெற்றிக்குப் பிறகு புதிய கதையுடன் மீண்டும் உருவாகியுள்ளது...
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியானது...
தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆனடுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் டாக்டர்...