Latest News :

இயக்குநர் பாண்டிராஜுக்கு கிடைத்த சூப்பர் வாய்ப்பு!
Tuesday August-24 2021

’பசங்க’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி பாராட்டு பெற்ற பாண்டிராஜ், முதல் படத்திலேயே சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் வென்றார். அப்படத்தை தொடர்ந்து சில தோல்விப் படங்களை இயக்கி கோலிவுட்டில் காணாமல் போனவர், பிறகு ‘மெரினா’ என்ற படத்தின் மூலம் கமர்ஷியல் ரூட்டில் பயணிக்க தொடங்கியவர் மீண்டும் கோலிவுட்டில் தொடர்ந்து படங்கள் இயக்கும் இயக்குநராகியிருப்பதோடு, கல்லா கட்டும் இயக்குநராகவும் உயர்ந்துள்ளார்.

 

தற்போது சூர்யாவை வைத்து ’எதற்கும் துணிந்தவன்’ என்ற படத்தை இயக்கி வரும் பாண்டிஜ்ராஜுக்கு சூப்பரான வாய்ப்பு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு இயக்குநர் பாண்டிராஜுக்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

 

ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படம் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில், அவருடைய அடுத்த படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தா’ பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாகவும், அந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

 

அனால், தேசிங்கு பெரியசாமி சொன்ன கதையை படமக்கா வேண்டும் என்றால் மிகப்பெரிய பட்ஜெட் தேவைப்படுகிறதாம். ரஜினிகாந்தின் சம்பளம் மற்றும் படத்தின் செலவு இரண்டையும் சேர்த்தால், படத்திற்கான வியாபாரத்தை காட்டிலும் செலவு பல மடங்கு அதிகமாக இருக்கிறதாம். அதனால், ரஜினிகாந்த் படத்தை தயாரிப்பதில் இருந்து ஏஜிஎஸ் நிறுவனம் பின்வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினியின் அடுத்த படத்தையும் தயாரிக்க முன் வந்திருக்கிறதாம். ஆனால், அந்த படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குநர் பாண்டிராஜுக்கு கொடுக்க வேண்டும், என்று ரஜினியின் கோரிக்கை வைத்துள்ளதாம். கதையை கேட்ட ரஜினியும் இதற்கு சம்மதம் தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Rajinikanth

 

ஆக, ரஜினிகாந்தின் படத்தை இயக்கும் வாய்ப்பு பாண்டிராஜுக்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம், இதில் திடீர் மாற்றம் ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

Related News

7698

தங்கம் விலை உயர்வால் கவலையடைந்த ஆண்ட்ரியா!
Monday November-17 2025

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

Recent Gallery