கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 6 ஆம் தேதி தொடங்கிது. ஆனால், சிம்புவால் தனக்கு பெரும் நஷ்ட்டம் ஏற்பட்டது என்றும், அதற்கான தீர்வு கிடைக்கும் அரை அவருடைய புதிய படங்களின் படப்பிடிப்புக்கு அனுமதியளிக்க கூடாது, என்று தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பான் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து சிம்பு படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது.
மேலும், இந்த விவகாரத்தால் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இடையே பிரச்சனையும் ஏற்பட்டது.
இந்த நிலையில், இந்த பிரச்சனை தொடர்பாக நேற்று மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. சிம்புவின் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கலந்துக் கொண்டார். மேலும், சுபாஷ் சந்திரபோஷ், தேணாண்டாள் முரளி, சிவசங்கர் ஆகியோரிடம் சிம்பு வாங்கிய பணத்தை தானே அவர்களுக்கு வழங்குவதாக ஒப்புக் கொண்ட ஐசரி கணேஷ், மைக்கேல் ராயப்பனையும் அழைத்து பேசி தீர்வு காண்பதாக உறுதியளித்தாராம்.
ஐசரி கணேஷின் இந்த நடவடிக்கையில் சிம்புவின் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை தயாரிப்பாளர்கள் சங்கம் நீங்கியிருப்பதோடு, அவருடைய படப்பிடிப்புக்கு பெப்ஸி தொழிலாளர்கள் ஒத்துழைப்பு தரலாம், என்றும் அறிவித்துள்ளது. இதனால், சிம்புவின் பிரச்சனை அனைத்தும் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து அவருடைய ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...