‘காதல் கொண்டேன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான சோனியா அகர்வால், அப்படத்தை தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்ததோடு, ரசிகர்களின் கனவு கண்ணியாகவும் திகழ்ந்தார். பிறகு இயக்குநர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டு நடிப்பு முழுக்கு போட்டுவிட்டார்.
பிறகு செல்வராகவனிடம் இருந்து விவாகரத்து பெற்றவர் மீண்டும் நடிக்க தொடங்கினார். ஆனால், அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் கிடைத்த வாய்ப்புகளில் நடித்து வந்தவர், தற்போது சீரியலிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை சோனியா அகர்வால் வீட்டில் கஞ்சா வழக்கு தொடர்பாக போலீசார் நடத்திய சோதனையில், அவர் வீட்டில் 40 கிராம் கஞ்சா கண்டெடுக்கப்பட்டதாகவும், இதையடுத்து போலீசார் அவரை கைது செய்ததாக தகவல் வெளியாக, கோலிவுட்டே அதிர்ச்சியடைந்தது.
ஆனால், உண்மையில் நடிகை சோனியா அகர்வால் கைது செய்யப்படவில்லை. மேலும், கன்னட நடிகை சோனியா அகர்வால் தான் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பற்றிய செய்தியில் தமிழ் நடிகை சோனியா அகர்வாலின் புகைப்படத்தை போட்டு சிலர் செய்தி வெளியிட்டுள்ளனர்.
இந்த தகவல் அறிந்ததும் கோபமடைந்த நடிகை சோனியா அகர்வால், தனது சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்து விளக்கம் அளித்ததோடு, தன்னைப் பற்றி தவறான செய்தி வெளியிடுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன், என்றும் எச்சரித்துள்ளார்.
உலக அளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து அதரப்பினரையும் கவர்ந்து, இன்று வரை அனைத்து தரப்பின் மக்களின் பேவரைட் ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஜுராசிக் வேர்ல்ட் ட்ரையாலாஜி’-யின் வெற்றிக்குப் பிறகு புதிய கதையுடன் மீண்டும் உருவாகியுள்ளது...
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியானது...
தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆனடுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் டாக்டர்...