’எனிமி’ மற்றும் ‘வீரமே வாகை சூடும்’ ஆகிய படங்களை முடித்துள்ள விஷாலின், புதிய படம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஷாலின் 32 வது திரைப்படமாக உருவாகும் இப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியது.
அறிமுக இயக்குநர் ஏ.வினோத்குமார் கதை, திரைக்கதை எழுதி இயக்கும் இப்படத்திற்கு பொன் பார்த்திபன், ஏ.வினோத்குமார் வசனம் எழுதுகின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்க, பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.
விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோர் ராணா புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்கள்.
இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார். இப்படம் சுனைனாவின் சினிமா வாழ்வில் முக முக்கியமான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
உலக அளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து அதரப்பினரையும் கவர்ந்து, இன்று வரை அனைத்து தரப்பின் மக்களின் பேவரைட் ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஜுராசிக் வேர்ல்ட் ட்ரையாலாஜி’-யின் வெற்றிக்குப் பிறகு புதிய கதையுடன் மீண்டும் உருவாகியுள்ளது...
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியானது...
தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆனடுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் டாக்டர்...