’எனிமி’ மற்றும் ‘வீரமே வாகை சூடும்’ ஆகிய படங்களை முடித்துள்ள விஷாலின், புதிய படம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஷாலின் 32 வது திரைப்படமாக உருவாகும் இப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியது.
அறிமுக இயக்குநர் ஏ.வினோத்குமார் கதை, திரைக்கதை எழுதி இயக்கும் இப்படத்திற்கு பொன் பார்த்திபன், ஏ.வினோத்குமார் வசனம் எழுதுகின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்க, பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.
விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோர் ராணா புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்கள்.
இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார். இப்படம் சுனைனாவின் சினிமா வாழ்வில் முக முக்கியமான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...