ஜெர்மனியை சேர்ந்த இலங்கை பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் ரூ.80 லட்சம் வரை ஏமாற்றியதாக நடிகர் ஆர்யா மீது அப்பெண் புகார் அளித்தார். பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் அலுவலகம் மூலம் அளிக்கப்பட்ட இந்த புகாரை தமிழக காவல்துறை விசாரித்து வந்தது.
இதற்கிடையே, இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, நடிகர் ஆர்யா பெயரை வைத்து வேறு இரண்டு பெயர், அந்த பெண்ணை ஏமாற்றி பணம் பறித்ததாக தெரிவித்த போலீசார், இரண்டு பேரை கைதும் செய்தது. இதனால், நடிகர் ஆர்யா மீது எந்த தவறும் இல்லை, என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது வழக்கறிஞர் தரப்பு, ஆர்யாவை தப்பிக்க வைப்பதற்காக காவல்துறை, வழக்கை திசை திருப்புவதாக குற்றம் சாட்டியதோடு, ஆர்யா தான் குற்றவாளி என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்து, அவருக்கு உரிய தண்டனை பெற்றுக் கொடுப்போம், என்று தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், நடிகர் ஆர்யா மீது சைபர் க்ரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆர்யாவின் பெயர் முதல் குற்றவாளியாகவும், அவரது தாயார் பெயர் 2 வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம், நடிகர் ஆர்யா விரைவில் கைது செய்யப்படலாம், என்றும் கூறப்படுகிறது.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...