ஜெர்மனியை சேர்ந்த இலங்கை பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் ரூ.80 லட்சம் வரை ஏமாற்றியதாக நடிகர் ஆர்யா மீது அப்பெண் புகார் அளித்தார். பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் அலுவலகம் மூலம் அளிக்கப்பட்ட இந்த புகாரை தமிழக காவல்துறை விசாரித்து வந்தது.
இதற்கிடையே, இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, நடிகர் ஆர்யா பெயரை வைத்து வேறு இரண்டு பெயர், அந்த பெண்ணை ஏமாற்றி பணம் பறித்ததாக தெரிவித்த போலீசார், இரண்டு பேரை கைதும் செய்தது. இதனால், நடிகர் ஆர்யா மீது எந்த தவறும் இல்லை, என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது வழக்கறிஞர் தரப்பு, ஆர்யாவை தப்பிக்க வைப்பதற்காக காவல்துறை, வழக்கை திசை திருப்புவதாக குற்றம் சாட்டியதோடு, ஆர்யா தான் குற்றவாளி என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்து, அவருக்கு உரிய தண்டனை பெற்றுக் கொடுப்போம், என்று தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், நடிகர் ஆர்யா மீது சைபர் க்ரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆர்யாவின் பெயர் முதல் குற்றவாளியாகவும், அவரது தாயார் பெயர் 2 வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம், நடிகர் ஆர்யா விரைவில் கைது செய்யப்படலாம், என்றும் கூறப்படுகிறது.
உலக அளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து அதரப்பினரையும் கவர்ந்து, இன்று வரை அனைத்து தரப்பின் மக்களின் பேவரைட் ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஜுராசிக் வேர்ல்ட் ட்ரையாலாஜி’-யின் வெற்றிக்குப் பிறகு புதிய கதையுடன் மீண்டும் உருவாகியுள்ளது...
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியானது...
தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆனடுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் டாக்டர்...