இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண்விஜய் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், படத்திற்கு ‘யானை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
அருண் விஜயின் 33 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் பஸ்ட் லுக்கை தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் என மொத்தம் 33 பிரபலங்கள் வெளியிட்டனர்.
தமிழின் முன்னணி நட்சத்திரங்களை வைத்து மிகப்பெரிய வெற்றிப்படங்களை தந்த இயக்குநர் ஹரி, தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் அருண் விஜய் முதல் முறையாக நடிக்கும் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரிபா பவானி சங்கர் நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரக்கனி, ராதிகா, யோகி பாபு, கே.ஜி.எப் புகழ் கருடா ராம், ராஜேஷ், அம்மு அபிராமி, ஜெயபாலன், புகழ், போஸ் வெங்கட், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, ரமா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு, தூத்துக்குடி, பழனி, ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் நடந்து முடிந்த நிலையில், தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு முடிந்ததும் மீண்டும் தூத்துக்குடி, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு செய்ய, அனல் அரசு சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.
உலக அளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து அதரப்பினரையும் கவர்ந்து, இன்று வரை அனைத்து தரப்பின் மக்களின் பேவரைட் ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஜுராசிக் வேர்ல்ட் ட்ரையாலாஜி’-யின் வெற்றிக்குப் பிறகு புதிய கதையுடன் மீண்டும் உருவாகியுள்ளது...
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியானது...
தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆனடுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் டாக்டர்...