‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு முடிவடைந்தது! - படக்குழு அறிவிப்பு
Saturday September-18 2021

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும், இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வரும் சரித்திர பிரம்மாண்ட திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. 

 

தமிழ் சினிமாவின் பல படைப்பாளிகளில் திரைப்படமாக்க நினைத்த கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் இறங்கிய போது பல தடைகளை எதிர்கொண்டாலும், லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன், என்ற மிகப்பெரிய சக்தி மூலம் அத்தனை தடைகளையும் தகர்த்தெரிந்து தற்போது சாதித்துள்ளார்.

 

ஆம், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி என முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா முழுக்க பல இடங்களில் நடந்ததோடு, தாய்லாந்து உள்ளிட்ட பிற பகுதிகளிலும் நடைபெற்று வந்தது. இறுதியாக தமிழகத்தின் பொள்ளாச்சியில் நடைபெற்ற படப்பிடிப்போடு முழு படப்பிடிப்பும் முடிவடைந்தது.

 

இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கும் நிலையில், பலர் முயன்று முடியாமல் போனதை மணிரத்னம் செய்து முடித்ததால், ’பொன்னியின் செல்வன்’ மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Related News

7740

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் போட்டியாளர்களை பதற வைத்த நடிகர்!
Friday February-13 2026

தமிழ்த் திரைப்படத்தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் வருகிற 22 ஆம் தேதி நடைபெற உள்ளது...

’வித் லவ்’ கொடுத்த முதல் வெற்றி! - செளந்தர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி
Thursday February-12 2026

சீயோன் (Zion Films) சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் எம்...

10 வது ஆண்டில் ஒன்று கூடிய ‘விசாரணை’ படக்குழு!
Thursday February-12 2026

தமிழ் சினிமாவில் வெளியான சில படங்கள் வெறும் திரைப்படங்களாக இல்லாமல், ஒரு காலகட்டத்தின் குரலாகவும், சமூக சாட்சியாகவும் மாறிவிடும்...

Recent Gallery