தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும், இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வரும் சரித்திர பிரம்மாண்ட திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’.
தமிழ் சினிமாவின் பல படைப்பாளிகளில் திரைப்படமாக்க நினைத்த கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் இறங்கிய போது பல தடைகளை எதிர்கொண்டாலும், லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன், என்ற மிகப்பெரிய சக்தி மூலம் அத்தனை தடைகளையும் தகர்த்தெரிந்து தற்போது சாதித்துள்ளார்.
ஆம், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி என முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா முழுக்க பல இடங்களில் நடந்ததோடு, தாய்லாந்து உள்ளிட்ட பிற பகுதிகளிலும் நடைபெற்று வந்தது. இறுதியாக தமிழகத்தின் பொள்ளாச்சியில் நடைபெற்ற படப்பிடிப்போடு முழு படப்பிடிப்பும் முடிவடைந்தது.
இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கும் நிலையில், பலர் முயன்று முடியாமல் போனதை மணிரத்னம் செய்து முடித்ததால், ’பொன்னியின் செல்வன்’ மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...