பா.இரஞ்சித் இயக்குநராக அறிமுகமாகிய ‘அட்டக்கத்தி’ படத்தின் மூலம் தான் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். அப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆக, தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்கள் பட்டியலில் சந்தோஷ் நாராயணன் இடம் பிடித்தார்.
மேலும், பா.இரஞ்சித் இதுவரை ’அட்டக்கத்தி’ படத்திற்குப் பிறகு இயக்கிய ’மெட்ராஸ்’, ’கபாலி’, ’காலா’, ’சார்பட்டா பரம்பரை’ என அனைத்துக்கும் சந்தோஷ் நாராயணன் தான் இசை. இயக்குநர் பா.இரஞ்சித் - இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூட்டணி என்றாலே ஹிட் கூட்டணி என்று கோலிவுட்டில் பெயர் எடுத்த இந்த கூட்டணி தற்போது பிரிந்துவிட்டது.
ஆம், பா.இரஞ்சித் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்திற்கு தென்மா என்பவர் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே பா.இரஞ்சித் தயாரித்த ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்திற்கு இசையமைத்திருப்பதோடு, கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் என்கிற கலைக்குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.
நாடக நடிகர் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது.
டாப் ஸ்டார் பிரஷாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் புதிய படமான ரஞ்ஜன்" படத்தின் டைட்டில் லுக் டீசர், திரைபிரபலங்கள் முன்னிலையில் இன்று கோலாகலமாக வெளியிடப்பட்டது...
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...