பா.இரஞ்சித் இயக்குநராக அறிமுகமாகிய ‘அட்டக்கத்தி’ படத்தின் மூலம் தான் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். அப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆக, தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்கள் பட்டியலில் சந்தோஷ் நாராயணன் இடம் பிடித்தார்.
மேலும், பா.இரஞ்சித் இதுவரை ’அட்டக்கத்தி’ படத்திற்குப் பிறகு இயக்கிய ’மெட்ராஸ்’, ’கபாலி’, ’காலா’, ’சார்பட்டா பரம்பரை’ என அனைத்துக்கும் சந்தோஷ் நாராயணன் தான் இசை. இயக்குநர் பா.இரஞ்சித் - இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூட்டணி என்றாலே ஹிட் கூட்டணி என்று கோலிவுட்டில் பெயர் எடுத்த இந்த கூட்டணி தற்போது பிரிந்துவிட்டது.
ஆம், பா.இரஞ்சித் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்திற்கு தென்மா என்பவர் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே பா.இரஞ்சித் தயாரித்த ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்திற்கு இசையமைத்திருப்பதோடு, கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் என்கிற கலைக்குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.
நாடக நடிகர் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது.
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...
டாவ்ன் (Dawn Pictures) தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் ‘பராசக்தி’...
யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படம், மேலும் மேலும் இருளும், ஆழமும் , துணிச்சலுடனும் வளர்ந்து வரும் ஒரு பிரம்மாண்டமான படைப்பாக தன்னை நிறுவி வருகிறது...