மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறில் தமிழக அரசு மணிமண்டபம் கட்டியுள்ளது. இதன் திறப்பு விழா சிவாஜி கணேசனின் 90 வது பிறந்தநாளான அக்டோபர் 1 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.
இதற்கிடையே, மணிமண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறக்காமல், அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைப்பார், என்று அரசு அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சிவாஜி கணேசனின் குடும்பத்தார் சார்பில் நடிகர் பிரபு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு, தமிழக அரசு சிவாஜி கணேசனை அவமானப்படுத்துவதாக, கூறி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நடிகர் திலகத்தை தமிழ்நாடு அரசு அவமானப்படுத்துகிறது. இந்தியத் திரையுலகத்திற்கு, முக்கியமாக தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த மேதை அவர். தமிழக முதல்வரே.. துணை முதல்வரே.. தமிழக அரசே.. உங்களுக்கு மேதைகளை மதிக்கத் தெரியாவிட்டால், நடிகர் திலகத்தை அவமானப்படுத்தி உங்கள் அதிகார அணுகுமுறையை காட்டாதீர்கள்..” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் எஸ்...
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...