வி.இசட்.துரை இயக்கத்தில், இயக்குநர் சுந்தர்.சி ஹீரோவாக நடித்த ‘இருட்டு’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது முறையாக வி.இசட்.துரை இயக்கத்தில், இயக்குநர் சுந்தர்.சி ஹீரோவாக நடிக்கிறார்.
ரைட் ஐ தியேட்டர் நிறுவனம் சார்பில் வி.இசட்.துரை மற்றும் எஸ்.எம்.பிரபாகரன் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ‘தலைநகரம் 2’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு மணிஜி வசனம் எழுதுகிறார். ஆர்.எஸ்.வெங்கட் மற்றும் ஏ.பி.வி.மாறன் இணை தயாரிப்பை கவனிக்கின்றனர்.
இப்படத்தின் துவக்க விழா பூஜையுடன் சமீபத்தில் நடைபெற்றது. படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...