வி.இசட்.துரை இயக்கத்தில், இயக்குநர் சுந்தர்.சி ஹீரோவாக நடித்த ‘இருட்டு’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது முறையாக வி.இசட்.துரை இயக்கத்தில், இயக்குநர் சுந்தர்.சி ஹீரோவாக நடிக்கிறார்.
ரைட் ஐ தியேட்டர் நிறுவனம் சார்பில் வி.இசட்.துரை மற்றும் எஸ்.எம்.பிரபாகரன் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ‘தலைநகரம் 2’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு மணிஜி வசனம் எழுதுகிறார். ஆர்.எஸ்.வெங்கட் மற்றும் ஏ.பி.வி.மாறன் இணை தயாரிப்பை கவனிக்கின்றனர்.
இப்படத்தின் துவக்க விழா பூஜையுடன் சமீபத்தில் நடைபெற்றது. படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...