நடிகர் சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் தான் நடிக்கும் படங்கள் மட்டும் இன்றி, புதுமுக நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள், வளர்ந்து வரும் நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குநர்களுக்கும் வாய்ப்பு அளித்து வருகிறார்.
அந்த வகையில், அமேசான் பிரைம் ஒடிடி தளத்திற்காக அவருடைய நிறுவனம் தயாரித்துள்ள நான்கு திரைப்படங்களில் ஒன்றான ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படம் கடந்த 24 ஆம் தேதி அமேசானில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.

இந்த நிலையில், அமேசான் ஒடிடி-யில் ’இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படத்தை பார்த்த நடிகர் சூர்யா, படத்தையும், படக்குழுவினரையும் புகழ்ந்திருக்கிறார்.
இது குறித்து நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில், ”இந்த மாணிக்கம் எங்கள் இதயங்களை நிரப்பியது. அது உங்களையும் நிரப்பும் என்று நம்புகிறேன். நான், எங்கள் புதிய குழு எடுத்த ஆற்றல் மற்றும் முயற்சியில் பெருமைப்படுகிறோம்.” என்று பதிவிட்டுள்ளார்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...