விஷாலின் ‘எனிமி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இப்பட்த்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். இதையடுத்து, ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தில் நடித்து வரும் விஷால், அறிமுக இயக்குநர் ஏ.வினோத்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் பிரபு முக்கியமான கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே ‘தாமிரபரணி’ மற்றும் ‘ஆம்பள’ ஆகிய படங்களில் விஷாலுடன் நடித்திருக்கும் பிரபு, மூன்றாவது முறையாக விஷால் படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார். நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இணைந்து ராணா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார்.
ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஜித்து மாதவன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படமான ‘சூர்யா 47’ படப்பிடிப்பு நேற்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது...
இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சின்ன சின்ன ஆசை' எனும் திரைப்படத்தில் நடிகை மதுபாலா மற்றும் நடிகர் இந்திரன்ஸ் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள்...
மும்பை, டிசம்பர் 2025: இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்தியா திரைப்பட கையகப்படுத்தல் ஒப்பந்தங்களில் ஒன்றான பனோரமா ஸ்டுடியோஸ், பென் ஸ்டுடியோஸுடன் இணைந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் மலையாளத் திரைப்படமான ’த்ரிஷ்யம் 3’ இன் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளைப் பெற்றுள்ளது...