விஷாலின் ‘எனிமி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இப்பட்த்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். இதையடுத்து, ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தில் நடித்து வரும் விஷால், அறிமுக இயக்குநர் ஏ.வினோத்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் பிரபு முக்கியமான கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே ‘தாமிரபரணி’ மற்றும் ‘ஆம்பள’ ஆகிய படங்களில் விஷாலுடன் நடித்திருக்கும் பிரபு, மூன்றாவது முறையாக விஷால் படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார். நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இணைந்து ராணா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார்.
தமிழ் சினிமாவில் பீட்சா என்ற தலைப்பில் வெளியான படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து, அதே பீட்சாவை மையமாக வைத்து வெளியான ‘காக்கா முட்டை’ படமும் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், அப்படங்களை தொடர்ந்து அதே பீட்சா அடையாளம் மட்டும் இன்றி, அதனுடன் சேர்ந்த ஐந்து இளைஞர்களின் புதிய ஐடியாலஜியுடன் உருவாகும் படம் தான் ‘பீட்சா பாய்ஸ்’...
‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், நடிகர்கள் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்’...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று அவரது புதிய படம் ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது...