விஷாலின் ‘எனிமி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இப்பட்த்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். இதையடுத்து, ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தில் நடித்து வரும் விஷால், அறிமுக இயக்குநர் ஏ.வினோத்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் பிரபு முக்கியமான கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே ‘தாமிரபரணி’ மற்றும் ‘ஆம்பள’ ஆகிய படங்களில் விஷாலுடன் நடித்திருக்கும் பிரபு, மூன்றாவது முறையாக விஷால் படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார். நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இணைந்து ராணா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார்.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...