நடிகர் ரஹ்மான் ‘சமாறா’ என்ற மலையாளப் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும், நடிகர் ரஹ்மான் தவிர படத்தில் நடித்த அனைவரும் டப்பிங் பேசி முடித்து விட்டார்கள்.
கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதல், ரஹ்மான் அங்கு சென்று டப்பிங் பேச முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதே சமயம், சென்னையில் உள்ள டப்பிங் அரங்குகளில் டப்பிங் பேச முயன்ற போது, ஏகப்பட்ட திரைப்படங்களின் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அவருக்கு எங்கும் இடம் கிடைக்கவில்லையாம். இதனால், ‘சமாறா’ படத்தின் பின்னணி பணிகள் முடிவடைய தாமதமாக, தயாரிப்பாளருக்கு இழப்பு ஏற்படும் சூழல் உருவானதாம்.
இதை அறிந்த நடிகை ராதிகா, தனது ராடான் டப்பிங் தியேட்டரில் டப்பிங் பேசிக்கொள்ள நடிகர் ரஹ்மானுக்கு அனுமதியளித்து உதவியுள்ளார்.
ராடான் தயாரிக்கும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் டப்பிங் பணிகள் மட்டுமே நடைபெற்று வரும் ராடான் டப்பிங் தியேட்டரில் முதல் முறையாக வேறு ஒரு படத்தின் டப்பிங் பணியை மேற்கொள்ள நடிகை ராதிகா அனுமதித்திருப்பது இதுவே முதல் முறையாம்.
தமிழ் சினிமாவில் பீட்சா என்ற தலைப்பில் வெளியான படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து, அதே பீட்சாவை மையமாக வைத்து வெளியான ‘காக்கா முட்டை’ படமும் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், அப்படங்களை தொடர்ந்து அதே பீட்சா அடையாளம் மட்டும் இன்றி, அதனுடன் சேர்ந்த ஐந்து இளைஞர்களின் புதிய ஐடியாலஜியுடன் உருவாகும் படம் தான் ‘பீட்சா பாய்ஸ்’...
‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், நடிகர்கள் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்’...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று அவரது புதிய படம் ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது...