நடிகர் ரஹ்மான் ‘சமாறா’ என்ற மலையாளப் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும், நடிகர் ரஹ்மான் தவிர படத்தில் நடித்த அனைவரும் டப்பிங் பேசி முடித்து விட்டார்கள்.
கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதல், ரஹ்மான் அங்கு சென்று டப்பிங் பேச முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதே சமயம், சென்னையில் உள்ள டப்பிங் அரங்குகளில் டப்பிங் பேச முயன்ற போது, ஏகப்பட்ட திரைப்படங்களின் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அவருக்கு எங்கும் இடம் கிடைக்கவில்லையாம். இதனால், ‘சமாறா’ படத்தின் பின்னணி பணிகள் முடிவடைய தாமதமாக, தயாரிப்பாளருக்கு இழப்பு ஏற்படும் சூழல் உருவானதாம்.
இதை அறிந்த நடிகை ராதிகா, தனது ராடான் டப்பிங் தியேட்டரில் டப்பிங் பேசிக்கொள்ள நடிகர் ரஹ்மானுக்கு அனுமதியளித்து உதவியுள்ளார்.
ராடான் தயாரிக்கும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் டப்பிங் பணிகள் மட்டுமே நடைபெற்று வரும் ராடான் டப்பிங் தியேட்டரில் முதல் முறையாக வேறு ஒரு படத்தின் டப்பிங் பணியை மேற்கொள்ள நடிகை ராதிகா அனுமதித்திருப்பது இதுவே முதல் முறையாம்.
இந்திய திரையுலகம் மறக்க முடியாத வரலாற்று தருணத்தை காணத் தயாராகிறது...
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆசீர்வாதமும் வழிகாட்டுதலும் துணையாக, உருவாகி வரும் ‘பயம் உன்னை விடாது’ திரைப்படக் குழுவினர் சமீபத்தில் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து மரியாதை செலுத்தினர்...
வி.ஜே.பப்பு மற்றும் அனுபமா இணைந்து நடித்துள்ள திரைப்படம் ’மை டியர் டாலி’...