புதிய சிந்தனையோடு உருவாகும் சிறு பட்ஜெட் படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வெற்றி பெறுவதுண்டு. அப்படி வெற்றிப் பெற்ற படங்கள் பல உண்டு. அதில் ஒரு படமாக இணைய உள்ள படமாக உருவாகி வருகிறது ‘யாரது’.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிகர் நம்பிராஜ் இயக்கியுள்ள இப்படத்தை வி.ஆர்.இண்டர்நேஷனல் மூவிஸ் சார்பில் ஏகனாபுரம் ரவி தயாரிக்கிறார்.
இதில் நாயகனாக வி.ரவி நடிக்க, நாயகியாக மதுஸ்ரீ நடிக்கிறார். இவர்களுடன் போஸ் வெங்கட், பெசன்ட்நகர் ரவி, வையாபுரி, காளியப்பர், போண்டாமணி, பெஞ்சமின், விஜய்கிருஷ்ணராஜ், அனிதா, ஜானகி, ஜெயமணி ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும், படத்தின் மிக முக்கியமான வேடத்தில் இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் நடித்துள்ளார்.
படம் குறித்து இயக்குநர் நம்பிராஜ் கூறுகையில், “சமுதாயத்தில் செல்வாக்கு மிக்க மூவரால் மக்கள் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இவர்களை சாட்சியுடன் கைது செய்ய இன்ஸ்பெக்டர் ரவி களம் இறங்குகிறார். ஆனால் அந்த மூவரும் ஒருவர் பின் ஒருவராக மர்மமான முறையில் கொலையாகின்றனர்.
ஏன்? எப்படி? என்ற கேள்விக்குறியோடு மூத்த போலீஸ் அதிகாரிகளுடன் இன்ஸ்பெக்டர் ரவி தீவிர விசாரணை செய்கிறார். அப்பொழுதுதான் காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் சம்பவம் ஒன்றுநடைபெறுகிறது. அது என்ன என்பதை, படத்தில் நடித்தவர்களுக்கு மட்டுமல்ல, படம் பார்ப்பவர்களுக்கும் வியப்பூட்டும் வண்ணம் இந்தப் படம் இருக்கும்.” என்றார்.
சபேஷ் முரளி இசையமைக்கும் இப்படத்திற்கு ரவிசுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். கோபிகிருஷ்ணா படத்தொகுப்பு செய்ய, ஆக்ஷன் பிரகாஷ் சண்டைக்காட்சிகளை அமைக்கிறார். நோபல் நடனம் அமைக்கிறார்.
திண்டுக்கல், சின்னாளப்பட்டி, சென்னை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
கடும் கோடை வெயிலில் இதம் தரும் தென்றலை போல காதல், நெகிழ்ச்சி மற்றும் மனதை வருடும் உணர்வுகளோடு ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது...
தமிழகத்தில் சட்டப்பேரவை பொது தேர்தல் காரணமாக அனைத்து மாநில அரசியல் கட்சிகளும், தேசிய அரசியல் கட்சிகளும் வாக்காளர்களை சந்தித்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள்...
‘வேர்ச்சொல் இலக்கிய விருது’ என்பது நீலம் பண்பாட்டு மையத்தின் முன்னெடுப்பில் கடந்த நான்கு வருடங்களாகக் கொடுக்கப்படும் விருதாகும்...