‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நடித்த யாஷிகா ஆனந்துக்கு கவர்ச்சி நடிகை என்ற முத்திரை குத்தப்பட்டதோடு, அம்மணிக்கு அப்படி...இப்படி...என்று நடிக்கும் வாய்ப்புகள் மட்டுமே வந்துக் கொண்டிருந்தது. அவரும் வண்டியை ஓட்டுவதற்கு தொடர்ந்து கவர்ச்சி நடிகையாக கோலிவுட்டில் பயணித்து வந்த நிலையில், ‘பெஸ்டி’ திரைப்படம் அவருக்கு சிறந்த நடிகை என்ற அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்துள்ளது.
ஆர்.எஸ்.சினிமா தயாரித்துள்ள இப்படத்தில் ’ஓம் முருகா’ புகழ் அசோக் குமார் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். இவர்களுடன் மாறன், அம்பானி சங்கர், சத்யன், சேஷு, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்க, கெளரவ வேடத்தில் லொள்ளு சபா ஜீவா நடித்துள்ளார்.
கதை, திரைக்கதை வசனம் எழுதி ரங்கா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஜே.வி இசையமைக்க, ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோபி படத்தொகுப்பு செயா, சுரேஷ் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். அருள்குமரன் இணைத்தயாரிப்பை கவனித்துள்ளார்.
இளமை துள்ளலுடன் திகிலும் மர்மமும் நிறைந்த படமாக உருவாகியுள்ள, இப்படத்தில் திகில் மற்றும் மர்மத்துக்கு புதிய பரிணாமத்தை காட்டியிருப்பதாக இயக்குநர் ரங்கா கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இப்படத்திற்கு டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது கிடைத்துள்ளது.

மேலும், அமெரிக்காவில் நடைபெற்ற லாஸ் விகாஸ் திரைப்பட விழாவில் யாஷிகா ஆனந்துக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. இதனால் கவர்ச்சி நடிகையாக இருந்த யாஷிகா ஆனந்துக்கு சிறந்த நடிகைக்கான அங்கீகாரத்தை இப்படம் பெற்றுக் கொடுத்துள்ளது.
கொல்கத்தாவில் நடைபெற்ற விர்ஜின் ஸ்பிரிங் திரைப்பட விழாவில் இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ள அசோக் அவர்களுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், சிறந்த முறையில் கதை சொல்லல், சிறந்த திரைக்கதை அமைத்தல், சிறந்த இயக்கம் என, படத்தை எழுதி இயக்கிய ரங்காவுக்கு மூன்று விருதுகளும் கிடைத்துள்ளது.
இப்படி, படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்துள்ள ‘பெஸ்டி’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...