நடிகர் சூர்யா அமேசான் பிரைம் ஒடிடி தளத்திற்காக தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நான்கு படங்களை தயாரித்துள்ளார். அப்படங்களில் ஒன்றான ‘இராமே ஆண்டாலும் இராவனே ஆண்டாலும்’ கடந்த வாரம் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், இரண்டாவதாக, ஜோதிகா, சசிகுமார், சமுதிரகனி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘உடன்பிறப்பே’ படம் வரும் அக்டோபர் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், அந்த நான்கு படங்களில் ஒன்றான சூர்யா நடித்திருக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தீபாவளி கொண்டாட்டமாக வரும் நவம்பர் 2 ஆம் தேதி ‘ஜெய் பீம்’ அமேசானில் நேரடியாக வெளியாகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகும் இப்படம், இந்தியா உள்ளிட்ட 240 நாடுகளில் பிரத்யேகமாக வெளியாகிறது.
த.செ.ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில், பழங்குடி சமூகங்களுக்கு இடையேயான முரண்பாடுகளை எதிர்த்துப் போராடும் வழக்கறிஞராக சூர்யா நடித்துள்ளார். இவருடன் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ், நடிகைகள் ரஜிஷா விஜயன், லிஜோமோள், ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
மிஸ்டரி டிராமா ஜானரில் தயாராகியிருக்கும் 'ஜெய் பீம்' படத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்த தம்பதிகளான செங்கேணி மற்றும் ராஜ்கண்ணுவின் வாழ்வியலை நுட்பமாகவும், ஆழமாகவும் பேசுகிறது. ராஜ்கண்ணு கைதுசெய்யப்பட்டு காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கிருந்து அவர் காணாமல் போகிறார். விசாரணைக்காக சென்ற தன்னுடைய கணவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த ராஜ்கண்ணுவின் மனைவி செங்கேணி, வழக்கறிஞர் சந்துருவின் உதவியை நாடுகிறார். வழக்கறிஞர் சந்துரு உண்மையை வெளிக் கொணரவும், மாநிலத்தில் ஆதரவற்ற பழங்குடி இன பெண்களுக்கு நீதி கிடைக்கவும் பொறுப்பேற்கிறார்.
அதில் அவர் வெற்றி பெற்றாரா? நீதி கிடைத்ததா? என்பதை அறிய நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைம் ஒடிடி தளத்தை பாருங்கள்.
ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் இணை தயாரிப்பை ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் கவனித்துள்ளார்.
நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்...
யூடியுப் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ’ஆன்டி இண்டியன்’ படத்தை தயாரித்த ஆதம் பாவா, தனது மூன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’...
கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘ஹனுமான்’ திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் வர்மா, இந்திய அளவில் கவனம் ஈர்த்திருப்பதோடு, அவரது அடுத்த படைப்பான ‘ஹனுமான்’ படத்தின் தொடர்சியான ‘ஜெய் ஹனுமான்’ படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...