தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சமந்தா, சூர்யா, விஜய் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தவர், தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகரும், நாகர்ஜுனாவின் மகனுமான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நாயகியாக நடித்து வந்த சமந்தா, சில திரைப்படங்களில் மிக கவர்ச்சியாக நடித்தார். இதனால், அவருடைய குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில், கடந்த சில நாட்களாக சமந்தா, நாகசைதன்யாவை விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இது குறித்து சமந்தா மற்றும் நாகசைதன்யா தரப்பில் இருந்து எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில், நடிகை சமந்தாவும், நடிகர் நாகசைதன்யாவும் தாங்கள் பிரிந்ததை, இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து நடிகை சமந்தா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, “எங்களின் நலன் விரும்பிகளுக்கும் இதனைச் சொல்லிக் கொள்கிறோம்.
நீண்ட யோசனைக்குப் பின்னர், நானும் நாகசைதன்யாவும் கணவன், மனைவியாக தொடரப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். பத்தாண்டுகளுக்கும் மேலாக எங்களுக்குள் நட்பு இருந்தது. அதை நாங்கள் பெரும் பொக்கிஷமாகக் கருதுகிறோம். அந்த நட்புதான் எங்கள் உறவுக்கு அடிப்படை. இனியும் கூட, எங்களுக்குள் அந்த நட்பின் நிமித்தமான பிரத்யேக பிணைப்பு தொடரும்.
இந்தக் கடுமையான காலகட்டத்தில் நண்பர்கள், நலன் விரும்பிகள், ஊடகங்கள் எங்களை ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். எங்களின் தனிநபர் சுதந்திரத்தைக் கருத்தில் கொள்ள வேண்டுகிறோம். அனைவருக்கும் நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.
உலக அளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து அதரப்பினரையும் கவர்ந்து, இன்று வரை அனைத்து தரப்பின் மக்களின் பேவரைட் ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஜுராசிக் வேர்ல்ட் ட்ரையாலாஜி’-யின் வெற்றிக்குப் பிறகு புதிய கதையுடன் மீண்டும் உருவாகியுள்ளது...
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியானது...
தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆனடுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் டாக்டர்...