Latest News :

கணவரை பிரிந்த நடிகை சமந்தா! - அதிர்ச்சியில் ரசிகர்கள்
Saturday October-02 2021

தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சமந்தா, சூர்யா, விஜய் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தவர், தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

 

கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகரும், நாகர்ஜுனாவின் மகனுமான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

 

திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நாயகியாக நடித்து வந்த சமந்தா, சில திரைப்படங்களில் மிக கவர்ச்சியாக நடித்தார். இதனால், அவருடைய குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில், கடந்த சில நாட்களாக சமந்தா, நாகசைதன்யாவை விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இது குறித்து சமந்தா மற்றும் நாகசைதன்யா தரப்பில் இருந்து எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.

 

இந்த நிலையில், நடிகை சமந்தாவும், நடிகர் நாகசைதன்யாவும் தாங்கள் பிரிந்ததை, இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 

 

Samantha and Nagasaidhanya

 

இது குறித்து நடிகை சமந்தா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, “எங்களின் நலன் விரும்பிகளுக்கும் இதனைச் சொல்லிக் கொள்கிறோம்.

 

நீண்ட யோசனைக்குப் பின்னர், நானும் நாகசைதன்யாவும் கணவன், மனைவியாக தொடரப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். பத்தாண்டுகளுக்கும் மேலாக எங்களுக்குள் நட்பு இருந்தது. அதை நாங்கள் பெரும் பொக்கிஷமாகக் கருதுகிறோம். அந்த நட்புதான் எங்கள் உறவுக்கு அடிப்படை. இனியும் கூட, எங்களுக்குள் அந்த நட்பின் நிமித்தமான பிரத்யேக பிணைப்பு தொடரும்.

 

இந்தக் கடுமையான காலகட்டத்தில் நண்பர்கள், நலன் விரும்பிகள், ஊடகங்கள் எங்களை ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். எங்களின் தனிநபர் சுதந்திரத்தைக் கருத்தில் கொள்ள வேண்டுகிறோம். அனைவருக்கும் நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.

Related News

7779

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery