Latest News :

கணவரை பிரிந்த சமந்தா அறிமுக இயக்குநரோடு கைகோர்த்தார்!
Tuesday October-05 2021

நடிகை சமந்தா, தனது கணவர் நாகசைதன்யாவை பிரிந்து விட்டார். இது குறித்து நாகசைதன்யாவும், சமந்தாவும் கூட்டாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தனர்.

 

திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வந்த சமந்தா நடிப்பில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படமும், ஒரு தெலுங்குப் படமும் முடிவடைந்துள்ளது.

 

இதற்கிடையே கணவரை பிரிந்த சமந்தா, சில காலம் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்க்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவர் உடனடியாக அறிமுக இயக்குநர் சாந்தரூபன் இயக்கும் படம் ஒன்றில் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டாராம்.

 

மேலும், சில பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தாலும், அவை அனைத்தையும் தவிர்த்து வந்த சமந்தா, அறிமுக இயக்குநரின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது அனைவரையும் வியப்படை செய்துள்ளது.

 

கதாநாயகியை மையப்படுத்திய இப்படத்தின் கதையும், சாந்தரூபன் கதை சொல்லிய விதமும் சமந்தாவுக்கு மிகவும் பிடித்துவிட்டதால் தான் அவர் உடனே ஓகே சொன்னாராம்.

 

இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க இருக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Related News

7785

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!
Wednesday November-19 2025

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...

Recent Gallery