நடிகை சமந்தா, தனது கணவர் நாகசைதன்யாவை பிரிந்து விட்டார். இது குறித்து நாகசைதன்யாவும், சமந்தாவும் கூட்டாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தனர்.
திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வந்த சமந்தா நடிப்பில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படமும், ஒரு தெலுங்குப் படமும் முடிவடைந்துள்ளது.
இதற்கிடையே கணவரை பிரிந்த சமந்தா, சில காலம் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்க்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவர் உடனடியாக அறிமுக இயக்குநர் சாந்தரூபன் இயக்கும் படம் ஒன்றில் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டாராம்.
மேலும், சில பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தாலும், அவை அனைத்தையும் தவிர்த்து வந்த சமந்தா, அறிமுக இயக்குநரின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது அனைவரையும் வியப்படை செய்துள்ளது.
கதாநாயகியை மையப்படுத்திய இப்படத்தின் கதையும், சாந்தரூபன் கதை சொல்லிய விதமும் சமந்தாவுக்கு மிகவும் பிடித்துவிட்டதால் தான் அவர் உடனே ஓகே சொன்னாராம்.
இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க இருக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் டிஜிட்டல் திரை நட்சத்திரமும், 'டிராகன்' படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவருமான வி ஜே சித்து கதையின் நாயகனாக நடித்து இயக்கும் 'டயங்கரம்' எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எல் ஏ ஸ்டுடியோவில் சிறப்பாக நடைபெற்றது...
டிரைகலர் பிலிம்ஸ் உடன் இணைந்து வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள புரட்சிகர தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் கொடையாளர் ஜி...
பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்து பரவலான பாராட்டுகளும், வரவேற்பும் கிடைத்து ஓடிக்கொண்டிருக்கும் ‘பைசன்’ படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் சென்னையில் கொண்டாடினார்கள்...