தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான விஜய் விஸ்வா, நடிப்பு மட்டும் இன்றி சமூக பணிகளில் அதிகம் ஆர்வம் காட்டி வருபவர். டெல்லியில் தமிழ விவசாயிகள் போராட்டம் நடத்திய போது, அவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துக் கொடுத்தார்.
மேலும், கொரோனா காலங்களில் பொதுமக்களுக்கும், வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளர்களுக்கும் உணவு, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவாசிய பொருட்களை வழங்கி உதவிய நடிகர் விஜய் விஸ்வா, சினிமாத் துறையில் இருக்கும் பிறரையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்படி கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில், நடிக விஜய் விஸ்வாவின் கொரோனா சேவைக்காக, அவரை கெளரவிக்கும் விதமாக ‘சர்வதேச அமைதி தமிழ் பல்கலைக்கழகம்’ சார்பில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்ட நீதிபதி என்.வைத்தியலிங்கம் தலைமையில், மதுரை வெஸ்டர்ன் பார்க் ஓட்டலில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், நடிகர் விஜய் விஸ்வாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

விழாவில் கமலம் குழுமம் சேர்மன் ஜெ.கே.முத்து, மங்கையர்கரசி பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் கார்த்திகேயன் மற்றும் எ.கே.ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் சமீபத்தில் நடைபெற்ற ரோட்டரி சங்க மாநில அளவிலான பொதுக்குழுவில் ஆளுநர் ஜெய்கன் மற்றும் பாலகுரு அவர்களது முன்னிலையில் மாநில அளவிலான கௌரவ உறுப்பினர் பதவி நடிகர் விஜய் விஸ்வாவுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா மீதான ஆர்வத்தால் படிப்புக்கு ஏற்ற பணி மற்றும் நல்ல ஊதியத்தை கைவிட்டுவிட்டு, நடிகராக வேண்டும் என்று பலர் கோடம்பாக்கத்தில் முகாமிட்டு பல வருடங்களாக வாய்ப்பு தேடி வரும் நிலையில், சமூக வலைதளங்கள் பிரபலமாகும் பலர் சினிமாவுக்குள் எளிதியில் நுழைந்து விடுகிறார்கள்...
ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள ‘நீளிரா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் என்...