விஜய் - அஜித் இருவரும் பொது இடத்தில் சந்தித்துக்கொண்டால் நண்பர்களைப் போல் பழகினாலும் அவரது ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் யுத்தமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிலும் சமூக வலைதள பக்கத்தில் வார்த்தைகளையே ஆயுதமாக்கி அவர்கள் நடத்தும் யுத்தம் பாகுபலி போரையே மிஞ்சிவிட்டது.
இந்த நிலையில், விஜய்க்காக எழுதப்பட்டு, அவருக்கு ரொம்ப பிடித்த கதையில் அஜித் நடித்து வெற்றி பெற்றதோடு, அந்த படத்தின் மூலம் தனது வாழ்க்கை துணையையும் அவர் தேர்வு செய்து, வாழ்க்கையில் செட்டிலான தகவல் தற்போது கசிந்துள்ளது.
அதே தான், சரண் இயக்கத்தில் அஜித் - ஷாலினி நடித்த ‘அமர்க்களம்’ படம் விஜய்க்காக எழுதப்பட்ட கதையாம். அந்த கதையும் விஜய்க்கு ரொம்ப பிடித்துப்போக சில காரணங்களால், அவர் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதால் தான் அஜித்தை நடிக்க வைத்ததாக இயக்குநர் சரண் கூறியுள்ளார்.
தனது இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘ஆயிரத்தில் இருவர்’ படத்தின் புரோமோஷனுக்காக டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த இயக்குநர் சரண் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
அஜித்தை வைத்து நான்கு படங்கள் இயக்கியுள்ள சரண் மீது விஜய் ரசிகர்கள் பெரும் கோபத்தில் இருக்கும் நிலையில், தற்போது அவரது இரண்டாவது படமே விஜய்க்கான எழுதப்பட்ட கதை தான், என்ற தகவல் வெளியானதால் இயக்குநர் சரணை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்களாம்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...