Latest News :

விஜய்க்காக எழுதப்பட்ட கதையால் வாழ்க்கையில் செட்டிலான அஜித்! - கசிந்த சுவாரஸ்ய தகவல்!
Friday September-29 2017

விஜய் - அஜித் இருவரும் பொது இடத்தில் சந்தித்துக்கொண்டால் நண்பர்களைப் போல் பழகினாலும் அவரது ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் யுத்தமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிலும் சமூக வலைதள பக்கத்தில் வார்த்தைகளையே ஆயுதமாக்கி அவர்கள் நடத்தும் யுத்தம் பாகுபலி போரையே மிஞ்சிவிட்டது.

 

இந்த நிலையில், விஜய்க்காக எழுதப்பட்டு, அவருக்கு ரொம்ப பிடித்த கதையில் அஜித் நடித்து வெற்றி பெற்றதோடு, அந்த படத்தின் மூலம் தனது வாழ்க்கை துணையையும் அவர் தேர்வு செய்து, வாழ்க்கையில் செட்டிலான தகவல் தற்போது கசிந்துள்ளது.

 

அதே தான், சரண் இயக்கத்தில் அஜித் - ஷாலினி நடித்த ‘அமர்க்களம்’ படம் விஜய்க்காக எழுதப்பட்ட கதையாம். அந்த கதையும் விஜய்க்கு ரொம்ப பிடித்துப்போக சில காரணங்களால், அவர் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதால் தான் அஜித்தை நடிக்க வைத்ததாக இயக்குநர் சரண் கூறியுள்ளார்.

 

தனது இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘ஆயிரத்தில் இருவர்’ படத்தின் புரோமோஷனுக்காக டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த இயக்குநர் சரண் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

 

அஜித்தை வைத்து நான்கு படங்கள் இயக்கியுள்ள சரண் மீது விஜய் ரசிகர்கள் பெரும் கோபத்தில் இருக்கும் நிலையில், தற்போது அவரது இரண்டாவது படமே விஜய்க்கான எழுதப்பட்ட கதை தான், என்ற தகவல் வெளியானதால் இயக்குநர் சரணை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்களாம்.

Related News

779

நான் இங்கு நிற்க விஜயகாந்த் தான் காரணம் - ‘எல்.எஸ்.எஸ்’ பட இயக்குநர் உருக்கம்
Monday February-16 2026

ஜெ.பி பிலிம்ஸ் சார்பில் பி.ரகு தயாரிப்பில், ஆர்...

குழந்தைகளின் கற்றலுக்கான ‘கலர் பென்சில்’! - 'கிகி & கொகொ' பட தயாரிப்பாளர்களின் புதிய முயற்சி
Monday February-16 2026

குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாகவும் எளிமையாகவும் மாற்றும் முயற்சியாக இந்தியாவில் முதன் முறையாக ’கலர் பென்சில்’- கிட்ஸ் எக்ஸ்பிரிமெண்டல் லேர்னிங் ஸ்டோர் சென்னை, கிளாம்பாக்கத்தில் தொடங்கப்பட்டது...

விவசாயிகளின் உரிமையை பேசும் ’அரிசி’ நிச்சயம் வெல்லும் - உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
Monday February-16 2026

மோனிகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி...

Recent Gallery