மலையாள நடிகை பாவனா கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டார். இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்து தீவிர விசாரணை நடத்திய போலீஸ், இதற்கு பின்னணியில் பிரபல மலையாள நடிகர் திலீப் இருப்பதை கண்டுபிடித்தது.
இதை தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட திலீப், நான்கு முறை ஜாமீன் தாக்கல் செய்தும் அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், ஐந்தாவது முறையாகவும் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற போது, பாவனாவை கடத்திய பல்சர் சுனிலுக்கு ரூ. 1.50 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், போலீசில் மாட்டிக்கொண்டால் ரூ. 3 கோடி கொடுக்கப்படும் என்று கூறப்பட்டதாகவும் தெரிவித்த அரசு வழக்கறிஞர், பாவனாவை கடத்துவதன் மூலம் திலீப்புக்கு ரூ.65 கோடி லாபம் கிடைக்கும், என்று சுனில் சக கைதிகளிடம் கூறியதாக, நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இத்தனை கோடி பணம் சம்மந்தப்பட்டிருக்கிறது என்றால், இந்த வழக்கில் திலீப்புக்கு பின்னாள் மேலும் பல இருப்பதாக கூறிய அவர் ஜாமீன் வழங்க கூடாது என்று வாதாடினார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...