தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்கம், தமிழக அரசிடம் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. சங்க உறுப்பினர்களின் நலனுக்கான கோரிக்கைகள் அடங்கிய மனுவை, சங்க நிர்வாகிகள் இன்று தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெள்ளகோவில் சுவாமிநாதனிடம் நேரில் வழங்கினார்கள்.
இன்று காலை சுமார் 11.30 மணிக்கு நடைபெற்ற இந்த சந்திப்பில் தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்கத்தின் தலைவர் டைமண்ட் பாபு, செயலாளர் யுவராஜ், இணைச் செயலாளர் கணேஷ்குமார் ஆகியோர் அமைச்சரை சந்தித்து, சங்கத்தின் நலன் சார்ந்த 5 கோரிக்கைகளுடன் கூடிய மனுவை வழங்கினார்கள். அந்த கோரிக்கைகளை படித்து பரிசீலித்த அமைச்சர், அடுத்த ஒரு மாதத்துக்குள் அவற்றை நிறைவேற்ற தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
முன்னதாக கடந்த 7 ஆம் தேதியன்று இதே நிர்வாகிகளை சந்தித்து மேற்படி கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் வெள்ளக்கோவில் சுவாமிநாதனைச் சந்தித்து அந்த மனுவை அளிக்கக் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலேயே இச்சந்திப்பு மிகத் துரிதமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய திரையுலகம் மறக்க முடியாத வரலாற்று தருணத்தை காணத் தயாராகிறது...
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆசீர்வாதமும் வழிகாட்டுதலும் துணையாக, உருவாகி வரும் ‘பயம் உன்னை விடாது’ திரைப்படக் குழுவினர் சமீபத்தில் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து மரியாதை செலுத்தினர்...
வி.ஜே.பப்பு மற்றும் அனுபமா இணைந்து நடித்துள்ள திரைப்படம் ’மை டியர் டாலி’...