தமிழ் சினிமாவில் தரமான படங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் நிறுவனம் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ். ’ஜோக்கர்’, ‘அருவி’ உள்ளிட்ட பல மாறுபட்ட திரைப்படங்களை தயாரித்துள்ள இந்நிறுவனம் தயாரிக்கும் 30 வது திரைப்படமும் மாறுபட்ட புதிய முயற்சியாக உருவாக உள்ளது.
சமந்தா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படம் ரொமாண்டிக் ஃபேண்டஸி படமாக உருவாகிறது. இப்படத்தை அறிமுக இயக்குநர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்குகிறார். இவர் இயக்குநர்கள் நெல்சன் வெங்கடேசன் மற்றும் தேசிங்கு பெரியசாமி ஆகியோரிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர்.
பெண் கதாப்பாத்திரத்தை மையப்படுத்திய ஃபேண்டஸி ரொமாண்டிக் வகை திரைப்படமான இப்படம் தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாகும். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கிலும் இப்படம் உருவாகிறது.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சமந்தா முதல் முறையாக நடிக்கிறார். இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
திரை இசை பாடல்களைப் போல் தற்போது சுயாதீன பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் முன்னணி இசையமைப்பாளர்கள் கூட தற்போது இதில் ஈடுபாடு காட்ட தொடங்கிவிட்டார்கள்...
நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்...
யூடியுப் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ’ஆன்டி இண்டியன்’ படத்தை தயாரித்த ஆதம் பாவா, தனது மூன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’...