நடிகர், இயக்குநர், கவிஞர் என பன்முகத்திறன் கொண்ட இ.வி.கணேஷ்பாபு, இயக்கி கதாநாயகனாக நடிக்கும் படம் ‘கட்டில்’. இதில் கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் பீ.லெனின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் இப்படத்தை மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
விரைவில் படத்தின் பாடல்கள் வெளியாக உள்ள நிலையில், பெங்களூரில் நடைபெற்ற இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் ‘கட்டில்’ திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.
பெங்களூரில் நடைபெற்று கொண்டிருக்கும் இன்னோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில், அக்டோபர் 15 ஆம் தேதி
இன்னோவேட்டிவ் மல்டிபிளக்ஸ் திரையரங்க வளாகத்தில் ’கட்டில்’ திரைப்படம் உலக திரைப்பட ஜாம்பவான்கள் மத்தியில் திரையிடப்பட்டது.
விரைவில் தியேட்டரில் வெளியாக இருக்கும் கட்டில் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கட்டில் திரைப்பட இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படங்கள் மற்றும் சாகச காட்சிகள் நிறைந்த படங்களின் வருகை அரிதாக இருக்கும் நிலையில், இரண்டு அம்சங்களும் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய படமாக உருவாகியுள்ளது ‘மரகதமலை’...
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் - தன்னுடைய எதிர்கால திட்டங்கள் குறித்தும், தற்போது பணியாற்றி வரும் பணிகள் குறித்தும், தன் மீது சமூக வலைதளங்கள் மூலமாக முன்வைக்கப்பட்ட எதிர்மறை விமர்சனங்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையிலும் சென்னையில் பத்திரிக்கையாளர் - ஊடகவியலாளர்களை சந்தித்தார்...
சங்கமித்ரன் புரொடக்ஷன்ஸ் மற்றும் அம்மன் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் சார்பில், என்...