நடிகர், இயக்குநர், கவிஞர் என பன்முகத்திறன் கொண்ட இ.வி.கணேஷ்பாபு, இயக்கி கதாநாயகனாக நடிக்கும் படம் ‘கட்டில்’. இதில் கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் பீ.லெனின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் இப்படத்தை மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
விரைவில் படத்தின் பாடல்கள் வெளியாக உள்ள நிலையில், பெங்களூரில் நடைபெற்ற இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் ‘கட்டில்’ திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.
பெங்களூரில் நடைபெற்று கொண்டிருக்கும் இன்னோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில், அக்டோபர் 15 ஆம் தேதி
இன்னோவேட்டிவ் மல்டிபிளக்ஸ் திரையரங்க வளாகத்தில் ’கட்டில்’ திரைப்படம் உலக திரைப்பட ஜாம்பவான்கள் மத்தியில் திரையிடப்பட்டது.
விரைவில் தியேட்டரில் வெளியாக இருக்கும் கட்டில் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கட்டில் திரைப்பட இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு தெரிவித்தார்.
ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஜித்து மாதவன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படமான ‘சூர்யா 47’ படப்பிடிப்பு நேற்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது...
இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சின்ன சின்ன ஆசை' எனும் திரைப்படத்தில் நடிகை மதுபாலா மற்றும் நடிகர் இந்திரன்ஸ் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள்...
மும்பை, டிசம்பர் 2025: இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்தியா திரைப்பட கையகப்படுத்தல் ஒப்பந்தங்களில் ஒன்றான பனோரமா ஸ்டுடியோஸ், பென் ஸ்டுடியோஸுடன் இணைந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் மலையாளத் திரைப்படமான ’த்ரிஷ்யம் 3’ இன் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளைப் பெற்றுள்ளது...