நடிகர், இயக்குநர், கவிஞர் என பன்முகத்திறன் கொண்ட இ.வி.கணேஷ்பாபு, இயக்கி கதாநாயகனாக நடிக்கும் படம் ‘கட்டில்’. இதில் கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் பீ.லெனின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் இப்படத்தை மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
விரைவில் படத்தின் பாடல்கள் வெளியாக உள்ள நிலையில், பெங்களூரில் நடைபெற்ற இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் ‘கட்டில்’ திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.
பெங்களூரில் நடைபெற்று கொண்டிருக்கும் இன்னோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில், அக்டோபர் 15 ஆம் தேதி
இன்னோவேட்டிவ் மல்டிபிளக்ஸ் திரையரங்க வளாகத்தில் ’கட்டில்’ திரைப்படம் உலக திரைப்பட ஜாம்பவான்கள் மத்தியில் திரையிடப்பட்டது.
விரைவில் தியேட்டரில் வெளியாக இருக்கும் கட்டில் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கட்டில் திரைப்பட இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு தெரிவித்தார்.
இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகும் பிரமாண்டமான திரைப்படம் ’கல்கி 2898 AD’...
அறிமுக இயக்குநர் பிரிட்டோ.ஜெபி இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘நிறம் மாறும் உலகில்’...
நட்சத்திர நடிகரும், இசையமைப்பாளருமான ஜீ...