நடிகைகளை மையப்படுத்திய கதைகளில் தொடர்ந்து நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார், தற்போது ‘அரசி’ என்ற படத்தில் வழக்கறிஞர் வேடத்தில் நடிக்கிறார்.
ரசி மீடியா மேக்கர்ஸ் மற்றும் வி.வி பிலிம்ஸ் சார்பில் ஏ.ஆர்.கே.ராஜராஜா, ஆவடி சே.வரலட்சுமி ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தை சூரிய கிரண் இயக்குகிறார். இவர் தெலுங்கில் பல வெற்றிப் படங்களை இயக்கியவர் ஆவார்.
வரலட்சுமி சரத்குமாருடன் கார்த்திக்ராஜு சித்தார்த்ராய், சந்தானபாரதி, சாப்ளின் பாலு, அந்தோணி தாஸ், கலக்கப்போவது யாரு சிவா, ஹரி உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு விபின் சித்தார்த் இசையமைக்க, செல்வா ஆர் ஒளிப்பதிவு செய்கிறார்.
பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை மையப்படுத்திய கதையம் கொண்ட இப்படத்தை காமெடி கலந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் சொல்லப் போகிறோம், என்று இயக்குநர் சூரிய கிரண் தெரிவித்தார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று (அக்டோபர் 19) பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. தொடர்ந்து சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது.
உலக அளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து அதரப்பினரையும் கவர்ந்து, இன்று வரை அனைத்து தரப்பின் மக்களின் பேவரைட் ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஜுராசிக் வேர்ல்ட் ட்ரையாலாஜி’-யின் வெற்றிக்குப் பிறகு புதிய கதையுடன் மீண்டும் உருவாகியுள்ளது...
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியானது...
தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆனடுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் டாக்டர்...