பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துக்கொள்ள போகும் நடிகை சமந்தா, திருமணத்திற்கு பிறகு அரசியலில் குதிக்கப் போவதாகவும், தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமந்தா - நாக சைதன்யா திருமணம் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. 6 ஆம் தேதி கிறிஸ்தவ முறைப்படி கோவாவிலும், 7 அம் தேதி இந்து முறைப்படியும் திருமணம் நடைபெற உள்ளது. இதையடுத்து ஐதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் சினிமா பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், திருமணத்திற்கு பிறகு அரசியலில் ஈடுபட உள்ள சமந்தா, 2019 ஆம் ஆண்டு தெலுங்கானாவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான வேலையில் சமந்தாவின் வருங்கால மாமனாரான நடிகர் நாகர்ஜூனா தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறாராம். தெலுங்கானாவின் ஹைதராபாத் மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழ்ந்து வரும் செகந்திராபாத் தொகுதியில் சமந்தா போட்டியிட போவதாகவும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் செய்தி பரவி வருகிறது.
இது அதிகாரப்பூர்வமான செய்தி இல்லை என்றாலும், இதுவரை இந்த செய்திக்கு சமந்தா தரப்பில் எந்தவித மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...