நடிகர் ரஜினிகாந்த் நேற்று திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் வழக்கமான பரிசோதனைகளுக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும், அவருடைய மனைவி லதா விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில், ரஜினிகாந்தின் உடல் நிலையில் திடீரென்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, திடீரென்று உடல் நிலை சரியில்லாமல் போனதால் தான் ரஜினிகாந்தை நேற்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், அவருக்கு ரத்த நாள திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டரியப்பட்டுள்ளது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து சிகிச்சைப்பெற்றால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று தெரிவித்துள்ள மருத்துவர்கள், ரஜினிக்கு ஏற்பட்டுள்ள ரத்த நாள பாதிப்பை சரிசெய்யும் சிகிச்சையில் ஈடுபட்டு இருப்பதாகவும், நரம்பியல் மற்றும் இருதய துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ரஜினிகாந்த் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால், பிற உறுப்புகளின் செயல்பாடுகளையும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினிகாந்தின் உடல் நிலையில் திடீரென்று பாதிப்பு ஏற்பட்டிருக்கும் தகவலால் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருப்பதோடு, ரஜினி ரசிகர்கள் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனியார் மருத்துவமனைக்கு படையெடுத்தும் வருகிறார்கள்.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...