Latest News :

”’ஜெய் பீம்’ படம் நிச்சயம் உங்களின் மனசாட்சியை அசைக்கும்” - சூர்யா நெகிழ்ச்சி
Saturday October-30 2021

சூர்யாவின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜெய் பீம்’ படத்தின் வெளியீட்டை தமிழ்த் திரையுலகம் மட்டும் இன்றி அரசியல் உலகமும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறது. காரணம், அப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும் உண்மை சம்பவம் தான். ஒடுக்கப்பட்டவர்களின் நீதிக்காக குரல் கொடுக்கும் ஒரு வழக்கறிஞரின் வெற்றிக்கரமான வழக்கை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகிறது.

 

20 ஆண்டுகளாக பல்வேறு கதாபாத்திரங்களில் தனது பலே நடிப்பால் ரசிகர்களை சேர்த்து வைத்திருக்கும் சூர்யா, அந்த ரசிகர்கள் கொட்டும் அன்பிற்கு இன்னுமொருமுறை ‘ஜெய் பீம்’ மூலம் பதிலளிக்கத் தயாராக உள்ளார். 

 

வியாபார நோக்கில் மட்டும் படங்களை தேர்வு செய்யாமல், எளிய மற்றும் நிராகரிக்கப்பட்ட மக்களை பயணத்தை வெளியுலகிற்கு தெரியப்படுத்தும் முயற்சியில் அவ்வபோது ஈடுபட்டு வரும் நடிகர் சூர்யா, ‘ஜெய் பீம்’ குறித்து கூறுகையில், “24 ஆண்டுகள் ஆகிவிட்டன நான் திரைத்துறைக்கு வந்து. இந்தப் பயணத்தில் நிறைய ஏற்றத்தாழ்வுகளை சந்தித்துவிட்டேன். ஆனால் எனது ரசிகர்கள் எல்லா தருணத்திலும் என்னுடன் நின்றுள்ளனர். அவர்களுக்கு என் மீது அதீத நம்பிக்கையுண்டு. இந்த நம்பிக்கை எனக்கும் எனது ரசிகர்களுக்கும் இடையே அழகான உறவை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அவர்கள் செலுத்தும் அன்புக்கு நான் கைமாறு செய்ய வேண்டும். அதைத்தான் நல்ல படங்களில் நடித்து செய்து கொண்டிருக்கிறேன்.

 

’ஜெய் பீம்’ திரைப்படம்  மற்ற படங்களைப்போல், எனக்கு சவுகரியமானதாக இல்லை. நான் இதுபோன்ற படங்களில் இதற்கு முன் நடித்ததே இல்லை. இது எனக்கு சவாலான திரைப்படம். இந்தப் படத்தின் கதை சொல்லப்பட்ட விதம், நடிகர்கள், படத்தின் உணர்வு என எல்லாமே சற்றே கனமானதாக, அழுத்தமானதாக இருக்கும். இது வெறும் பொழுதுபோக்குக்கான படம் அல்ல. இது நிச்சயம் உங்களின் மனசாட்சியை அசைக்கும். உங்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அப்படியே கடந்து சென்றுவிட முடியாது. நிச்சயமாக இந்தத் திரைப்படம் நீண்ட நாட்களுக்கு நினைவில் கொள்ளப்படும். இந்தப் படத்தில் நடித்துள்ளதே ஒரு பொறுப்பான செயல் தான். இனிவரும் காலங்களிலும் நான் எனது ரசிகர்களுக்கு இன்னும் சிறப்பான படங்களை கொடுக்க விடும்புகிறேன்.” என்றார்.

 

த.செ.ஞானவேல் கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர் சந்துருவாக, நடித்துள்ளார் சூர்யா. படத்தினை ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணைந்து தயாரித்துள்ளார். 

 

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில், வரும் நவம்பர் 2 ஆம் தேதி வெளியாக உள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோ ஒடிடி தளத்தின் மூலம் 240 நாடுகளில் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

7856

’ஜுராசிக் வேர்ல்டு : ரீபர்த்’ பற்றி மனம் திறந்த ஸ்கார்லெட் ஜோஹன்சன்!
Wednesday June-18 2025

உலக அளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து அதரப்பினரையும் கவர்ந்து, இன்று வரை அனைத்து தரப்பின் மக்களின் பேவரைட் ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஜுராசிக் வேர்ல்ட் ட்ரையாலாஜி’-யின் வெற்றிக்குப் பிறகு புதிய கதையுடன் மீண்டும் உருவாகியுள்ளது...

’மெட்ராஸ் மேட்னி’ படத்தை பார்த்த பலர் என்னை கட்டிப்பிடித்த அழுதார்கள்! - நடிகர் காளி வெங்கட் நெகிழ்ச்சி
Wednesday June-18 2025

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியானது...

ரஜினிகாந்தின் பாராட்டால் உற்சாகமடைந்த ‘கண்ணப்பா’ படக்குழு!
Monday June-16 2025

தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆனடுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் டாக்டர்...

Recent Gallery