பழங்குடி இருளர் சமூக மக்களின் மறைக்கப்பட்ட வலிகளை உலகிற்கு உரக்க சொல்லும் முயற்சியாக சூர்யா நடித்து, தயாரித்திருக்கும் படம் ‘ஜெய் பீம்’. நவம்பர் 2 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படம் பத்திரிகையாளர்களுக்காக நேற்று திரையிடப்பட்டது. படத்தை பார்த்த ஒட்டு மொத்த பத்திரிகையாளர்களும், படத்தையும், அதில் வழக்கறிஞர் வேடத்தில் நடித்த சூர்யாவையும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
இப்படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு இதுவரை எந்த ஒரு ஒடிடி படத்திற்கும் கிடைக்காத வரவேற்பு என்பதால், ஒட்டு மொத்த திரையுலகம் மட்டும் இன்றி, சினிமா ரசிகர்களும் இப்படத்தை கொண்டாடி வரும் நிலையில், படத்தை தயாரித்த சூர்யா - ஜோதிகா தம்பதி, பழங்குடி இருளர் இன மக்களின் நலனுக்காக தங்களது 2டி நிறுவனம் சார்பில் ரூ.1 கோடி நிதி உதவி செய்துள்ளனர்.
இதற்கான காசோலையை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் முன்னிலையில் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் நலனுக்காக சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து வழங்கினார். இந்த நிகழ்வில் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், நீதியரசர் சந்துரு, இயக்குநர் த.செ.ஞானவேல் மற்றும் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...