இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், தான் இயக்கும் படங்களில் ஒன்று இரண்டு காட்சிகளில் தலைக்காட்டி வந்தவர், தற்போது முழுநேர நடிகராக உருவெடுத்து வருகிறார். அதிலும், போலீஸ் அதிகாரியாக நடித்து வந்தவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடிக்க தொடங்கியிருக்கிறார்.
இந்த நிலையில், ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி ஆகியோரது நடிப்பில் உருவாகும் ‘மைக்கேல்’ திரைப்படத்தில் கெளதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல்.எல்.பி இணைந்து தயாரிக்கும் இப்படம் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படத்தில் சந்தீப் கிஷன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க, விஜய் சேதுபதி அதிரடியான சிறப்புத் தோற்றம் ஒன்றில் நடிக்கிறார். தற்போது இவர்களுடன் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனும் கைகோர்த்துள்ளார்.
பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகவிருக்கும் இந்த படத்தை தயாரிப்பாளர்கள் பரத் சௌத்ரி மற்றும் புஷ்கர் ராம்மோகன் ராவ் ஆகியோர் தயாரிக்க, நாராயண் தாஸ் கே நரங் வழங்குகிறார்.
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...
சமீபத்திய மழையில் நனைந்த நடை பாதை வியபாரிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், பல உதவிகள் செய்த, கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி...