இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், தான் இயக்கும் படங்களில் ஒன்று இரண்டு காட்சிகளில் தலைக்காட்டி வந்தவர், தற்போது முழுநேர நடிகராக உருவெடுத்து வருகிறார். அதிலும், போலீஸ் அதிகாரியாக நடித்து வந்தவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடிக்க தொடங்கியிருக்கிறார்.
இந்த நிலையில், ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி ஆகியோரது நடிப்பில் உருவாகும் ‘மைக்கேல்’ திரைப்படத்தில் கெளதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல்.எல்.பி இணைந்து தயாரிக்கும் இப்படம் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படத்தில் சந்தீப் கிஷன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க, விஜய் சேதுபதி அதிரடியான சிறப்புத் தோற்றம் ஒன்றில் நடிக்கிறார். தற்போது இவர்களுடன் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனும் கைகோர்த்துள்ளார்.
பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகவிருக்கும் இந்த படத்தை தயாரிப்பாளர்கள் பரத் சௌத்ரி மற்றும் புஷ்கர் ராம்மோகன் ராவ் ஆகியோர் தயாரிக்க, நாராயண் தாஸ் கே நரங் வழங்குகிறார்.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...