இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், தான் இயக்கும் படங்களில் ஒன்று இரண்டு காட்சிகளில் தலைக்காட்டி வந்தவர், தற்போது முழுநேர நடிகராக உருவெடுத்து வருகிறார். அதிலும், போலீஸ் அதிகாரியாக நடித்து வந்தவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடிக்க தொடங்கியிருக்கிறார்.
இந்த நிலையில், ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி ஆகியோரது நடிப்பில் உருவாகும் ‘மைக்கேல்’ திரைப்படத்தில் கெளதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல்.எல்.பி இணைந்து தயாரிக்கும் இப்படம் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படத்தில் சந்தீப் கிஷன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க, விஜய் சேதுபதி அதிரடியான சிறப்புத் தோற்றம் ஒன்றில் நடிக்கிறார். தற்போது இவர்களுடன் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனும் கைகோர்த்துள்ளார்.
பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகவிருக்கும் இந்த படத்தை தயாரிப்பாளர்கள் பரத் சௌத்ரி மற்றும் புஷ்கர் ராம்மோகன் ராவ் ஆகியோர் தயாரிக்க, நாராயண் தாஸ் கே நரங் வழங்குகிறார்.
டாப் ஸ்டார் பிரஷாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் புதிய படமான ரஞ்ஜன்" படத்தின் டைட்டில் லுக் டீசர், திரைபிரபலங்கள் முன்னிலையில் இன்று கோலாகலமாக வெளியிடப்பட்டது...
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...