இந்த ஆண்டின், இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி படங்களின் வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பாகுபலி படத்திற்கு பிறகு தான் இயக்கும் அடுத்த படம் குறித்து விரைவில் அறிவிக்க உள்ள ராஜமவுலி, தனது குடும்பத்தோடு ஓய்வு எடுக்க பல்வேறு வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, தற்போது இலங்கையில் ஓய்வு எடுத்து வரும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, அங்குள்ள தமிழர்களுடன் இணைந்து தனது ஓய்வு நாட்களை கழித்து வருகிறார்.
இலங்கையின் கலே பகுதியில் உள்ள தமிழ் இளைஞர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய ராஜமவுலி, அந்த இளைஞர்களின் தோலில் கை போட்டு புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராஜமவுலி, இலங்கை தமிழர்களுடன் கிரிக்கெட் விளையாடியது வேடிக்கையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது, என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் - தன்னுடைய எதிர்கால திட்டங்கள் குறித்தும், தற்போது பணியாற்றி வரும் பணிகள் குறித்தும், தன் மீது சமூக வலைதளங்கள் மூலமாக முன்வைக்கப்பட்ட எதிர்மறை விமர்சனங்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையிலும் சென்னையில் பத்திரிக்கையாளர் - ஊடகவியலாளர்களை சந்தித்தார்...
சங்கமித்ரன் புரொடக்ஷன்ஸ் மற்றும் அம்மன் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் சார்பில், என்...
பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகாஷ் அமையா ஜெயின் தயாரிப்பில் ஜெயராம்,விஜய் சேதுபதி, நகுல், ஆத்மிகா, ரித்திகா சென் நடிப்பில் சனில் இயக்கியுள்ள திரைப்படம் காதல் கதை சொல்லவா...