Latest News :

இலங்கை தமிழர்களுடன் இணைந்த ‘பாகுபலி’ இயக்குநர்!
Saturday September-30 2017

இந்த ஆண்டின், இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி படங்களின் வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பாகுபலி படத்திற்கு பிறகு தான் இயக்கும் அடுத்த படம் குறித்து விரைவில் அறிவிக்க உள்ள ராஜமவுலி, தனது குடும்பத்தோடு ஓய்வு எடுக்க பல்வேறு வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

 

அதன்படி, தற்போது இலங்கையில் ஓய்வு எடுத்து வரும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, அங்குள்ள தமிழர்களுடன் இணைந்து தனது ஓய்வு நாட்களை கழித்து வருகிறார்.

 

இலங்கையின் கலே பகுதியில் உள்ள தமிழ் இளைஞர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய ராஜமவுலி, அந்த இளைஞர்களின் தோலில் கை போட்டு புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார்.

 

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராஜமவுலி, இலங்கை தமிழர்களுடன் கிரிக்கெட் விளையாடியது வேடிக்கையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது, என்று தெரிவித்துள்ளார்.

Related News

789

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

தென்னிந்தியாவின் முதல் பான் இந்தியா இசை ஆல்பம் ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla)!
Thursday April-02 2026

தென்னிந்தியாவில் சுயாதீன பாடல்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்களை கவரும் துள்ளல் மற்றும் காதல் பாடலாக உருவாகியுள்ளது ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla)...

Recent Gallery