இந்த ஆண்டின், இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி படங்களின் வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பாகுபலி படத்திற்கு பிறகு தான் இயக்கும் அடுத்த படம் குறித்து விரைவில் அறிவிக்க உள்ள ராஜமவுலி, தனது குடும்பத்தோடு ஓய்வு எடுக்க பல்வேறு வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, தற்போது இலங்கையில் ஓய்வு எடுத்து வரும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, அங்குள்ள தமிழர்களுடன் இணைந்து தனது ஓய்வு நாட்களை கழித்து வருகிறார்.
இலங்கையின் கலே பகுதியில் உள்ள தமிழ் இளைஞர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய ராஜமவுலி, அந்த இளைஞர்களின் தோலில் கை போட்டு புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராஜமவுலி, இலங்கை தமிழர்களுடன் கிரிக்கெட் விளையாடியது வேடிக்கையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது, என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...