பல ஆண்டுகள் தடைகளுக்குப் பிறகு வடிவேலு மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சுராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் கதையின் நாயகனாக நடிக்கும் வடிவேலு, மேலும் சில படங்களில் நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்க இருக்கும் படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்த வடிவேலு, முதல்வர் உடனான சந்திப்பிற்கு பிறகு தனது வாழ்கை பிரகாசமாகிவிட்டதாக கூறினார். அதேபோல், அவருக்கு தற்போது தொடர்ந்து பட வாய்ப்புகளும் கிடைத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும், உதயநிதி தயாரித்த ‘ஆதவன்’ திரைப்படத்தில் நடித்திருந்த வடிவேலு, அன்று முதல் உதயநிதியுடன் நல்ல நட்புறவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே, மாரிசெல்வராஜ் மற்றும் உதயநிதி இணையும் படத்தில் வடிவேலு நடிப்பது கிட்டதட்ட உறுதி என்றே சொல்லப்படுகிறது.
‘பரியேறும் பெருமாள்’ மற்றும் ‘கர்ணன்’ ஆகிய படங்களை இயக்கிய மாரிசெல்வராஜ், தனது படங்களில் காமெடி நடிகர் யோகி பாபுக்கு நல்ல குணச்சித்திர வேடங்களை கொடுத்ததால், வடிவேலுவையும் காமெடி நடிகராக மட்டும் இன்றி நல்ல குணச்சித்திர நடிகராகவும் பயன்படுத்துவார், என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...