திரைப்படங்களில் மட்டுமே ஒரு நடிகர் நடிக்க வேண்டும், நிஜத்தில் என்றுமே நடிக்க கூடாது, என்ற கொள்கையோடு வாழும் நடிகர் அஜித்குமார், தன்னை வைத்து எந்த ஒரு சர்ச்சையும் உருவாகமல் இருப்பதில் மிக கவனமாக இருக்கிறார்.
பொது நிகழ்ச்சியோ அல்லது திரைப்பட விழாக்களிலோ கலந்துக்கொள்ளாமல் இருந்தாலும் கூட அஜித்தின் பெயரால் அவ்வபோது சில பரபரப்புகள் எழுவதுண்டு. அதுபோன்ற நேரங்களில் தனது மேலாளர் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அதை ஆஃப் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கும் அஜித், இன்று வெளியிட்டுள்ள திடீர் அறிக்கை மூலம் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆம், அஜித்தை ரசிகர்கள் தல என்று அழைத்து வர, இனி தனது பெயருக்கு முன்பு ‘தல’ என்ற பட்டப்பெயரை பயன்படுத்த வேண்டாம், என்று அஜித்குமார் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து நடிகர் அஜித்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு,
இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற் பெயரான அஜித்குமார் அல்லது அஜித் என்றோ அல்லது ஏ.கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது.
தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம், என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்.
உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்.
என்றும் அன்புடன்
அஜித்குமார்
இவ்வாறு அந்த அறிக்கையில் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.
அஜித்தின் இந்த அறிக்கையால் அவருடைய ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்திருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், அஜித்தின் அன்பு வேண்டுகோளை அவர்கள் ஏற்று, இனி தல என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் இருப்பார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...