திரைப்படங்களில் மட்டுமே ஒரு நடிகர் நடிக்க வேண்டும், நிஜத்தில் என்றுமே நடிக்க கூடாது, என்ற கொள்கையோடு வாழும் நடிகர் அஜித்குமார், தன்னை வைத்து எந்த ஒரு சர்ச்சையும் உருவாகமல் இருப்பதில் மிக கவனமாக இருக்கிறார்.
பொது நிகழ்ச்சியோ அல்லது திரைப்பட விழாக்களிலோ கலந்துக்கொள்ளாமல் இருந்தாலும் கூட அஜித்தின் பெயரால் அவ்வபோது சில பரபரப்புகள் எழுவதுண்டு. அதுபோன்ற நேரங்களில் தனது மேலாளர் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அதை ஆஃப் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கும் அஜித், இன்று வெளியிட்டுள்ள திடீர் அறிக்கை மூலம் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆம், அஜித்தை ரசிகர்கள் தல என்று அழைத்து வர, இனி தனது பெயருக்கு முன்பு ‘தல’ என்ற பட்டப்பெயரை பயன்படுத்த வேண்டாம், என்று அஜித்குமார் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து நடிகர் அஜித்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு,
இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற் பெயரான அஜித்குமார் அல்லது அஜித் என்றோ அல்லது ஏ.கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது.
தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம், என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்.
உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்.
என்றும் அன்புடன்
அஜித்குமார்
இவ்வாறு அந்த அறிக்கையில் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.
அஜித்தின் இந்த அறிக்கையால் அவருடைய ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்திருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், அஜித்தின் அன்பு வேண்டுகோளை அவர்கள் ஏற்று, இனி தல என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் இருப்பார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...