சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளியன்று வெளியான ‘அண்ணாத்த’ ரசிகர்கள் எதிர்ப்பார்த்த ரஜினி படமாக இல்லை என்றாலும், வியாபார ரீதியாக படம் வெற்றி பெற்றுவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துவிட்டது.
இருந்தாலும், பட ரிலீஸுக்கு பிறகு வெளியான விமர்சனங்களால் படத்தின் வசூல் பெரிய அளவு பாதிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில், ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார்? என்ற கேள்விக்கான விடை தற்போது கிடைத்திருக்கிறது.
ரஜினியின் புதிய படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிப்பது உறுதியாகியிருக்கும் நிலையில், இயக்குநர்கள் பட்டியலில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குநர் தேசிங்கு பெரியசாமி மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், பாண்டியராஜ் பெயரை ரஜினிகாந்த் டிக் அடித்திருக்கிறாராம்.
இயக்குநர் பாண்டியராஜ் கூறிய குடும்ப கதை ஒன்று ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்திருந்ததால், அவர் இயக்கத்தில் நடிக்கவே அவர் அதிகம் விரும்புவதால், சன் பிக்சர்ஸ் நிறுவனமும் அந்த வாய்ப்பை பாண்டியராஜுக்கு கொடுத்துவிட்டதாம்.

தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூர்யா நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை இயக்கி வரும் பாண்டிராஜ், அப்படம் முடிந்த பிறகு ரஜினிகாந்த் பட வேலைகளை தொடங்குவார் என்று கூறப்படுகிறது.
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...