சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளியன்று வெளியான ‘அண்ணாத்த’ ரசிகர்கள் எதிர்ப்பார்த்த ரஜினி படமாக இல்லை என்றாலும், வியாபார ரீதியாக படம் வெற்றி பெற்றுவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துவிட்டது.
இருந்தாலும், பட ரிலீஸுக்கு பிறகு வெளியான விமர்சனங்களால் படத்தின் வசூல் பெரிய அளவு பாதிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில், ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார்? என்ற கேள்விக்கான விடை தற்போது கிடைத்திருக்கிறது.
ரஜினியின் புதிய படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிப்பது உறுதியாகியிருக்கும் நிலையில், இயக்குநர்கள் பட்டியலில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குநர் தேசிங்கு பெரியசாமி மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், பாண்டியராஜ் பெயரை ரஜினிகாந்த் டிக் அடித்திருக்கிறாராம்.
இயக்குநர் பாண்டியராஜ் கூறிய குடும்ப கதை ஒன்று ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்திருந்ததால், அவர் இயக்கத்தில் நடிக்கவே அவர் அதிகம் விரும்புவதால், சன் பிக்சர்ஸ் நிறுவனமும் அந்த வாய்ப்பை பாண்டியராஜுக்கு கொடுத்துவிட்டதாம்.
தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூர்யா நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை இயக்கி வரும் பாண்டிராஜ், அப்படம் முடிந்த பிறகு ரஜினிகாந்த் பட வேலைகளை தொடங்குவார் என்று கூறப்படுகிறது.
உலக அளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து அதரப்பினரையும் கவர்ந்து, இன்று வரை அனைத்து தரப்பின் மக்களின் பேவரைட் ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஜுராசிக் வேர்ல்ட் ட்ரையாலாஜி’-யின் வெற்றிக்குப் பிறகு புதிய கதையுடன் மீண்டும் உருவாகியுள்ளது...
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியானது...
தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆனடுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் டாக்டர்...