சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளியன்று வெளியான ‘அண்ணாத்த’ ரசிகர்கள் எதிர்ப்பார்த்த ரஜினி படமாக இல்லை என்றாலும், வியாபார ரீதியாக படம் வெற்றி பெற்றுவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துவிட்டது.
இருந்தாலும், பட ரிலீஸுக்கு பிறகு வெளியான விமர்சனங்களால் படத்தின் வசூல் பெரிய அளவு பாதிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில், ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார்? என்ற கேள்விக்கான விடை தற்போது கிடைத்திருக்கிறது.
ரஜினியின் புதிய படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிப்பது உறுதியாகியிருக்கும் நிலையில், இயக்குநர்கள் பட்டியலில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குநர் தேசிங்கு பெரியசாமி மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், பாண்டியராஜ் பெயரை ரஜினிகாந்த் டிக் அடித்திருக்கிறாராம்.
இயக்குநர் பாண்டியராஜ் கூறிய குடும்ப கதை ஒன்று ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்திருந்ததால், அவர் இயக்கத்தில் நடிக்கவே அவர் அதிகம் விரும்புவதால், சன் பிக்சர்ஸ் நிறுவனமும் அந்த வாய்ப்பை பாண்டியராஜுக்கு கொடுத்துவிட்டதாம்.
தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூர்யா நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை இயக்கி வரும் பாண்டிராஜ், அப்படம் முடிந்த பிறகு ரஜினிகாந்த் பட வேலைகளை தொடங்குவார் என்று கூறப்படுகிறது.
நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்...
யூடியுப் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ’ஆன்டி இண்டியன்’ படத்தை தயாரித்த ஆதம் பாவா, தனது மூன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’...
கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘ஹனுமான்’ திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் வர்மா, இந்திய அளவில் கவனம் ஈர்த்திருப்பதோடு, அவரது அடுத்த படைப்பான ‘ஹனுமான்’ படத்தின் தொடர்சியான ‘ஜெய் ஹனுமான்’ படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...