பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கிறார், என்ற தகவல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில், இன்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘மகான்’ ஆகிய படங்களில் நடித்து வரும் விக்ரமின் 61 வது படத்தை இயக்குநர் பா.இரஞ்சித் இயக்குகிறார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் 23 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. மேலும், படத்தில் நடிக்கும் பிற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விபரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளனர்.
‘சார்பட்டா பரம்பரை’ மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கும் இயக்குநர் பா.இரஞ்சித் நடிகர் விக்ரமுடன் இணைந்திருப்பதால் இப்படத்தின் மீது இப்போதே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...