Latest News :

நான்கு கதாநாயகிகள் நடிக்கும் திரில்லர் படம்!
Saturday December-04 2021

தமிழ் சினிமாவில் கதாநாயகிகளை மையப்படுத்திய திகில் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லர் படங்களின் வருகை அதிகரித்துள்ளது. அந்த வகையில், நான்கு கதாநாயகிகள் நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படம் ஒன்று உருவாக உள்ளது.

 

சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, மனிஷா ஜஸ்னானி, சந்திரலேகா ஆகிய நான்கு பேரும் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை எஸ்.எஸ்.பிரபு மற்றும் சங்கர் பிக்சர்ஸ் தயாரிக்க, அறிமுக இயக்குநர் கிரிதரன் இயக்குகிறார்.

 

‘சார்பட்டா’ புகழ் டாடி ஜான் விஜய் வித்தியாசமான தோற்றத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

 

கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு அசோக் குமார் ஒளிப்பதிவு செய்ய, ஆர்.ராமர் படத்தொகுப்பு செய்கிறார். எஸ்.ஜே.ராம் கலையை நிர்மாணிக்கிறார்.

 

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் துவக்க விழா இன்று சென்னை பிரசாத் லேபில் பூஜையுடன் நடைபெற்றது. இதில் ‘மாநாடு’ தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட படக்குழுவினரை வாழ்த்தினார்.

 

New Movie Pooja

 

சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் வித்தியாசமான திரைக்கதையோடு உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

Related News

7907

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery