தமிழ் சினிமாவில் கதாநாயகிகளை மையப்படுத்திய திகில் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லர் படங்களின் வருகை அதிகரித்துள்ளது. அந்த வகையில், நான்கு கதாநாயகிகள் நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படம் ஒன்று உருவாக உள்ளது.
சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, மனிஷா ஜஸ்னானி, சந்திரலேகா ஆகிய நான்கு பேரும் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை எஸ்.எஸ்.பிரபு மற்றும் சங்கர் பிக்சர்ஸ் தயாரிக்க, அறிமுக இயக்குநர் கிரிதரன் இயக்குகிறார்.
‘சார்பட்டா’ புகழ் டாடி ஜான் விஜய் வித்தியாசமான தோற்றத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு அசோக் குமார் ஒளிப்பதிவு செய்ய, ஆர்.ராமர் படத்தொகுப்பு செய்கிறார். எஸ்.ஜே.ராம் கலையை நிர்மாணிக்கிறார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் துவக்க விழா இன்று சென்னை பிரசாத் லேபில் பூஜையுடன் நடைபெற்றது. இதில் ‘மாநாடு’ தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட படக்குழுவினரை வாழ்த்தினார்.

சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் வித்தியாசமான திரைக்கதையோடு உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.
ஐடிஏஏ புரொடக்ஷன்ஸ் (IDAA Productions) மற்றும் திங் ஸ்டுடியோஸ் (Think Studios) நிறுவனங்கள் தயாரிப்பில் இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில், இளம் நட்சத்திர நடிகர் ஹரீஷ் கல்யாண், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், வட சென்னையின் பின்னணியில், ராப் இசைக் கலையை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் ’தாஷமக்கான்’...
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...