சமூக வலைதளங்களில் ரொம்ப ஆக்டிவாக இயங்கும் நடிகை கஸ்தூரி, அவ்வபோது சமூகம் குறித்த தனது கருத்துக்களை நையாண்டியாகவும் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் நடிகை கஸ்தூரி மோதியுள்ளார். இந்த மோதல் இருவருக்கும் இடையிலேனா பேச்சு மோதலாகும்.
வரும் அக்டோபர் 2 ஆம் தேதி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டி நியூஸ் 7 சேனலில் ஒளிபரப்பாக உள்ள பட்டிமன்றத்தில் தான் நடிகை கஸ்தூரியும், சீமானும் தங்களது பேச்சால் மோதிக்கொண்டனர்.
மாணவர்களுக்கு மத்தியில், ”தமிழகத்தின் இன்றைய நிலைக்கு காரணம் தலைவர்களா..? மக்களா..?” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பட்டிமன்றத்தில், நடிகை கஸ்தூரியும், சீமானும் பேசியுள்ளார்கள். இவர்களோடு RJ விஜய், RJ மிருதுளா போன்றவர்களும் பேசியுள்ளார்கள்.
இந்த சிறப்பு பட்டிமன்றம் அக்டோபர் 2-ஆம் தேதி பகல் 1:00மணிக்கும் இதன் மறுஒளிபரப்பாக இரவு 9:00மணிக்கும் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...
தென்னிந்தியாவில் சுயாதீன பாடல்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்களை கவரும் துள்ளல் மற்றும் காதல் பாடலாக உருவாகியுள்ளது ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla)...